அளவுக்கு அதிகமான தகவல்கள் கிடைக்கக்கூடிய உலகச் சூழலில் மாணவர்களுக்குப் பாடம் கற்பிப்பது மட்டும் ஆசிரியர்களின் கடமையாகிவிடாது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார். அதற்கும் மேலாக, பகுத்
தறியும் ஆற்றலை மாணவர்கள் பெற அவர்கள் வழிகாட்ட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். எதிர்கால சவால்களுக்கு தீர்வு காணவும் எதிர்காலத் தேவைகளுக்குத் தயாராகவும் மாணவர்
களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார் அவர். தேசிய கல்விக் கழகம் நடத்திய மாநாட்டில் ஏறத்தாழ 700 ஆய்வாளர்கள், கல்வி
யாளர்களிடம் திரு சான் இவ்வாறு கூறினார்.
இனி வரும் ஆண்டுகளில் கல்வி முறையில் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுவது அவசியம் என்று கூறிய திரு சான், உலகளவிலான இணைப்பு அதிகரித்துள்ளபோதிலும் பலரிடையே கருத்து, கொள்கை அடிப்படையில் பிளவு இருப்பதைச் சுட்டினார்.
"மாணவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்த வேண்டும். கிடைக்கும் தகவல்கள் எங்கிருந்து, யாரிடமிருந்து வருகிறது என்பதை ஆராய்ந்து உறுதி செய்துகொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு இருக்க வேண்டும். பலதரப்பட்ட கருத்துகள், கொள்கைகள் இருப்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டு அவற்றை மதிக்க வேண்டும்," என்று திரு சான் தெரிவித்தார்.
பாடத்திட்டத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு ஆற்றல்களை ஏற்படுத்தித் தருவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் சான் கூறினார்.