கி. ஜனார்த்தனன்
தொழில்நுட்பத் திறனைப் புத்தாக்
கத்துடன் பயன்படுத்தி சிங்கப்
பூரின் கடல்துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார் சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் சமூகத் தீர்வுகள் பிரிவுக்கான உதவி துணைத் தலைவர் ஸ்ரீராம் ராமானுஜம், 43. கடற்துறைத் தளவாட முறைகளை மேலும் சீரமைக்க இவரது தலைமைத்துவத்தில் உருவாக்கப்பட்ட 'அறிவார்ந்த தளவாட சுற்றுச்சூழல்' என்ற திட்டம், சிங்கப்பூர் கணினிச் சங்கத்தின் 'தொழில்நுட்பத் தலைவர்'
விருதைப் பெற்றுள்ளது.
கடல்துறை, துறைமுக ஆணையத்தில் 21 ஆண்டுகளாகப் பணியாற்றும் திரு ஸ்ரீராமின் 'அறிவார்ந்த தளவாட சுற்றுச்சூழல்' திட்டத்தில் 'ஸ்மார்ட்புக்கிங்', 'ஐபோக்ஸ்' ஆகிய தளங்கள் உள்ளடங்குகின்றன. சிங்கப்பூரின் தளவாட வசதிகள், சரக்கு வாகனங்கள், முனையங்கள், பணி
மனைகள் ஆகியவற்றை இணைக்கிறது. 'ஸ்மார்ட்புக்கிங்' என்ற தளத்தின் வாயிலாக துறைமுகங்கள், பணிமனைகள், தளவாட வசதிகள் ஆகியவற்றுக்கு முன்பதிவு செய்யலாம். துறைமுகம், காலியான சரக்குப் பெட்டிகள் வைக்கப்படும் பணிமனைகள், சரக்குகள் வைக்கப்படும் இடங்கள் ஆகியவை கடற்துறை தளவாடத்தின் மூன்று மையப்
புள்ளிகளாகத் திகழ்வதாகக் கூறும் திரு ஸ்ரீராம், அவற்றுக்கு இடை
யிலான இணைப்புகளை வலுப்
படுத்துவதே தமது திட்டத்தின் குறிக்கோள் என்றார்.
கடல்துறையின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் விதமாக வளங்
களைக் கையாள்வது இருக்கவேண்டும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, இந்த மையப்புள்ளி களுக்கு இடையிலான சரக்கு வாகன பயண முறையில்
சீரற்ற நிலை நிறைய இருந்ததைச் சுட்டினார். "சில நேரங்களில் 15 நிமிடங்களில் முடியவேண்டிய சரக்கு லாரியின் பயண வேலைகள், காத்திருப்புகள் காரணமாக இரண்டு மணி நேரம் வரை எடுக்கிறது. பயனுள்ள வகையில் பயன்
படுத்தவேண்டிய இந்நேரம், முடிவில் இரண்டு மணி நேரம் வரை எடுத்தது," என்று அவர் கூறினார். ஆறு பயணங்கள் வரை செல்லக்கூடிய லாரிகள் சில நேரங்களில் நான்கு பயணங்களே செல்கின்றன. லாரிகள் நகராமல் இருந்தாலும் எரிபொருளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுவதாகவும் திரு ஸ்ரீராம்
சுட்டினார். 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திட்டத்திற்கான பணிகள் தொடங்கின. அதே ஆண்டு ஜூலை மாதத்தில் இத்தளத்தின் முதல் வடிவம் உருவாக்கப்பட்டது. கொவிட்-19 காலகட்டத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதால் பத்துப் பேர் அடங்கிய தமது குழு நிச்சயமற்ற சூழலில் பணியாற்ற வேண்டி இருந்ததாகக் கூறினார். உலக அளவில் தளவாடத் துறையில் தகவல் பகிர்வு பொதுவாக குறைவாக இருந்ததால் தளவாடப் பங்காளிகளிடம் புதிய தொழில்நுட்பத்தின் நன்மைகளை எடுத்துக்கூற வேண்டி இருந்தது. புதிய தளத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு இவரின் குழுவினர் அணுக்கமாக வழிகாட்டினர்.
சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட திரு ஸ்ரீராம், 1996ஆம் ஆண்டு சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மின்னியல், மின்னணுவியல் பொறியியல் பயின்று பின்னர் தேசிய பல்கலைக்கழகத்தில் பயின்றார். தற்போது மனைவி, 14 வயது மகளுடன் இவர் சிங்கப்பூரில் வசிக்கிறார். விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறிய திரு ஸ்ரீராம், தொழில்நுட்பத் தீர்வுகளால் சாதாரண ஊழியர்கள் பெரிதும்
பலனடைவதால் அத்தகைய தீர்வுகளை உருவாக்குவதில் இளம் தொழில்நுட்பர்கள் முனைப்பு காட்டு வது நல்லது என்று கூறினார்.
"தளவாட இணையக் கட்டமைப்பைக் கடல்துறை, துறைமுக ஆணையம் இனி வரும் ஆண்டுகளில் மேன்மேலும் முன்னெடுத்துச் செல்லும்," என்றார் திரு ஸ்ரீிராம் தெரிவித்தார்.