கட்டுமானத் திட்ட நிர்வாகத்தின் மேம்பாட்டுக்காக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் ஆய்வுப்பணிகளுக்குப் பொறியாளர் கழகம் $350,000ஐ நன்கொடையாக வழங்கியது.
கட்டுமான திட்ட மேம்பாட்டு நிதிக்காக, ஐ.இ.ஸ் வோங் யூ சியோங் ஆய்வைத் தொடங்கி வைப்பதற்கு இந்த நன்கொடை பயன்படும். மேலும், இத்துறையில் புது செயல்முறைகளை அமலாக்கம் செய்யும் நோக்கின் அடிப்
படையில் கட்டுமானத் திட்ட மேலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக இரண்டு முதுகலை ஆய்வுத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும். அவற்றுக்கும் இந்த நன்கொடை பயன்படும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் திரு வோங் யூ சியோங் பொறியாளர் கழகத்திற்கு ஒரு மில்லியன் வெள்ளி நன்கொடை வழங்கி
இருந்தார்.
அந்த நன்கொடையின் ஒரு பகுதியே இந்த ஆய்வுப்பணி
களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு திட்டப்பணிக்கும் பொறியியல் முனைவர் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்ற ஒரு முழு நேர ஆய்வாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
தேர்தெடுக்கப்பட்ட நபர்கள் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்
கழக்கத்தின் கட்டுமான நிர்வாக நிபுணர்களுடன் பணிபுரிந்து இத்துறைக்கு ஏற்ற சிறந்த செயல்
முறைகளைப் பரிந்துரை செய்வதோடு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவையும் வழங்குவார்கள்.
பேச்சுத்திறமை, தலைமைத்துவம் மற்றும் நிர்வாக திறன்களைக் கொண்ட இளம் பொறியாளர்களை உருவாக்கும் இளம் பொறியாளர் தலைமைத்துவ திட்டத்தின் திறப்பு விழாவில் இந்தக் காசோலை வழங்கப்பட்டது.
தேசியத் தொழிற்சங்க காங்கிரஸின் உதவி தலைமைச் செயலாளர் மெல்வின் யோங் இவ்விழாவில் கலந்துகொண்டார்.