கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை பல அமைப்புகள் சேர்ந்து தீவு முழுவதும் நடத்திய அமலாக்க சோதனையில் பல்வேறு விதிகளை மீறியதற்காக 48 கேளிக்கை, இரவுநேர விடுதிகள் பிடிபட்டன. அவற்றில் சில விடுதிகள் உரிமம் பெறாதவை. அந்த விடுதிகளில் ஏழு விடுதிகள் கொவிட்-19 விதிகளை மீறியதாக காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
தீவு முழுவதும் உள்ள 1,543 விடுதிகளில் அமலாக்க சோதனை நடத்தப்பட்டது. காவல்துறை, சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம், எண்டர்பிரைஸ் சிங்கப்பூர், சிங்கப்பூர் உணவு அமைப்பு, சிங்கப்பூர் நில ஆணையம், செந்தோசா மேம்பாட்டுக் கழகம், ஜேடிசி கழகம் ஆகியன இணைந்து அமலாக்க சோதனையை நடத்தின.
இதில் பல்வேறு குற்றங்களுக்காக 16 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்ட 103 பேர் கைது செய்யப்பட்டனர்.