சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி மேலும் 12,784 பேருக்கு
கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,946ஆகப் பதிவானது.
அதைவிட நேற்றைய பதிவு இரண்டு மடங்கிற்கும் அதிகம்.
கடந்த செவ்வாய்க்கிழமை பதிவான பாதிப்பட்டோர் எண்ணிக்கையைவிடவும் (11,504) நேற்றைய எண்ணிக்கை அதிகம்.
கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதிக்குப் பிறகு நேற்றுதான் ஆக அதிகமானோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 22ல் 13,000க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
மற்ற நாள்களில் அறிவிக்கப்படும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையைவிட செவ்வாய்க்கிழமைகளில் அறிவிக்கப்படும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெரும்பாலும் அதிகமாக இருக்கும். வாரயிறுதிகளில் கூடுதல் ஒன்றுகூடல்கள் நிகழ்வதால் மேலும் பலருக்குக் கிருமித்தொற்று ஏற்படுவதே இதற்குக் காரணம். வார அடிப்படையிலான தொற்று விகிதம் நேற்று 1.34ஆகக் குறைந்தது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
நேற்று முன்தினம் இந்த விகிதம் 1.45ஆக இருந்ததாக அமைச்சு கூறியது.