தங்களது பிள்ளைகளின் பள்ளியில் ஈடுபாடு காட்ட விரும்பும், முழுநேர வேலையில் உள்ள பெற்றோர்கள் தங்களது திறன்களை அந்தப் பள்ளிக்குத் திருப்பித் தருவவது பற்றி பரி
சீலிக்கலாம். தங்களது திறன்களைச் சிறப்பான முறையில் பயன்படுத்த வேண்டிய இடங்களை அடையாளம் காண குடும்ப வாழ்க்கை நிபுணரான ஜூன் யோங் பெற்றோர்களுக்கு யோசனை கூறி உள்ளார்.
"வேலை செய்யும் பெற்றோர் களுக்கு நேரப் பற்றாக்குறை இருக்கும். களைப்பாக இருப்பார்கள். எனவே, பள்ளிக்கூட நிகழ்வுகளில் தொண்டூழியம் புரிவது என்பது அவர்களின் முதற்கட்ட விருப்பமாக இருக்க வாய்ப்பில்லை.
"அதேநேரம் நிபுணத்துவத் திறன்கள் அதிகம் தேவைப்படும் இடங்களில் அந்தத் திறன்களைத் தொண்டூழியமாக வழங்கலாம். பள்ளிக்கூடம் என்பது மாணவர்கள், கல்வியாளர்கள் ஆகியயோருடன் பெற்றோர்களும் பயன்பெறக் கூடிய விரிவான சமூகம். அங்கு பெற்றோர்களின் நிபுணத்துவத் திறன் கள் தேவைப்படலாம்," என்று விளக்கினார் திருவாட்டி ஜூன்.
அரசாங்க ஊழியரும் கான்கோர்ட் தொடக்கப் பள்ளி, கிராஞ்சி உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றின் பெற்றோர் ஆதரவுக் குழுத் தலைவருமான கணேசன் மணியம், 53, பெற்றோர்கள் தங்களது கடுமையான பணிகளுக்கு இடையில் பள்ளிக்கு நேரத்தை ஒதுக்குவது பற்றி யோசிக்கலாம் என்றார்.
"எல்லா நேரமும் அவர்கள் பள்ளிக்கூடத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபடப்போவதில்லை. வேலை செய்யும் பெற்றோர்களுக்காக நீக்குப்போக்கான ஏற்பாடுகள் உள்ளன. மாலை நேரங்களிலோ சனிக்கிழமைகளிலோ ஸும் வழியாகப் பெற்றோர் நிகழ்வுகளை நடத்துகிறோம்.
"நான் பங்கேற்கும் கூட்டங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிந்துவிடும். பெற்றோர்கள் தங்களது குடும்பத்தைக் கவனிக்கச் செல்ல வேண்டும் என்பதில் நான் கவனமாக இருப்பேன். பள்ளிகளில் பல நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் இந்த நேரத்தில் பெற்றோர்கள் ஈடுபட விரும்பும் நிகழ்வுகளில் பங்கேற்க இது நல்ல வாய்ப்பு," என்றார் திரு கணேசன் மணியம்.