சிங்கப்பூரின் மரபுடைமையைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளைத் தக்கவைக்கவும் மரபுடைமைத் துறையின் திறன்களை வலுப்
படுத்தவும் கடந்த ஆண்டு $1.66 மில்லியன் மதிப்பிலான நன்கொடை வழங்கியவர்களைப் பாராட்டும் விதமாக 'மரபுடைமையின் புரவலர் விருது 2021' நிகழ்ச்சி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 31 நன்கொடையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தேசிய பாரம்பரியத்தை வளப்படுத்துவதற்கான பங்களிப்புகளை குறிப்பிடத்தக்க வகையில் அளித்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவப்படுத்துவதையும் மரபுடைமையை மேம்படுத்துவதையும் இந்நிகழ்ச்சி நோக்கமாக கொண்டிருந்தது.
தேசிய மரபுடைமை வாரியத்தின் ஏற்பாட்டில் மலாய் மரபுடைமை நிலையத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் இரண்டாம் சட்ட அமைச்சருமான எட்வின் டோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
"எங்கள் ஆதரவாளர்களின் தாராள மனப்பான்மையை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். சிங்கப்பூர் மரபுடைமைத் திட்டம் 2.0 தயாராகிவரும் வேளையில், நாம் நமது மரபுடைமை மற்றும் அருங்காட்சியகத் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியைத் நோக்கி முன்னோக்கிச் செல்கிறோம். இதன்மூலம், சிங்கப்பூரர்களின் ஆதரவோடு நம்மால் அதிக நம்பிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு நிறைந்த சிங்கப்பூரை உருவாக்க முடியும்," என்று திரு எட்வின் கூறினார்.
நிகழ்ச்சியில் யுவபாரதி அனைத்துலகப் பள்ளிக்கு (YBIS) 'மரபுடைமையின் தோழர் விருது' வழங்கப்பட்டது. "இந்தப் பள்ளி 2016ஆம் ஆண்டு முதல் தேசிய மரபுடைமை வாரியத்துடன் இணைந்து செயல்
படுகிறது. வருங்காலத் தலை
முறைக்கு நமது மரபையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து முன்னிலைப்படுத்த எங்கள் பள்ளி உதவி வருவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்," என்று யுவபாரதி அனைத்துலகப் பள்ளியின் இயக்குநர் திருமதி லதா மோகன்குமார் கூறினார்.
இவ்வாண்டு, 'என்.என். இன்வெஸ்ட்மெண்ட் பார்ட்னர்ஸ்' நிறு
வனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கோபி மிர்சந்தானிக்கு 'மரபுடைமை ஆதரவாளர் விருது' வழங்கப்பட்டது.
"எனது பெற்றோர் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள். நான் வளர்ந்த காலத்தில் நாங்கள் சண்டையைவிட இன நல்லிணக்கத்தை;த தான் பெரிதளவில் அனுபவித்திருக்கிறோம்.
"நம் உள்ளூர் மக்களும் சுற்றுப்பயணிகளும் சிங்கப்பூரின் மரபுடைமையை அர்த்தமுள்ள வகையில் அனுபவிக்க வேண்டும். துறைமுக நகரமான நம் சிங்கையின் தனித்துவமான வரலாற்றைப் பற்றி அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்," என்று திரு கோபி மிர்சந்தானி கூறினார்.
தேசிய மரபுடைமை வாரியத்தின் தலைவர் திருமதி யோ சீ யான், "இந்த சவாலான காலகட்டத்தில், நமது மரபுடைமையை மேம்படுத்தி கட்டிக்காக்க உதவிய நன்கொடையாளர்களின் அன்பளிப்புகளும் தொடர்ச்சியான ஆதரவும் எங்களுக்கு பெரிதளவில் உத்வேகத்தையும் உந்துதலையும் அளித்துள்ளன," என்று கூறினார்.