இரு ஆண்களுக்கு இடையிலான ஓரின பாலியல் உறவைக் குற்றமாகக் கருதும் சட்டப்பிரிவு 377ஏ நீக்கப்பட்டாலும் கல்விக் கொள்கைகள், பாடத்திட்டங்கள் சிங்கப்பூரின் குடும்பப் பண்புகளையும் சமூக நெறிமுறைகளையும் ஒட்டியே இருக்கும் என்று கல்வி அமைச்சு நேற்று மறுவுறுதிப்படுத்தியது.
இதையே பெரும்பாலான சிங்கப் பூரர்களின் விருப்பமாகவும் இருப்ப தாக நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அது சுட்டிக்காட்டியிருந்தது.
பள்ளிகளும் உயர் கல்வி நிலையங்களும் அறிவாற்றலைப் பெருக்கும் இடமாக மட்டுமே இருக்கும். சமூகத்தை பிளவுப்படுத்தும் விவகாரங்களுக்கு வாக்குவாதத் தளமாகவும் போட்டியிடும் இடமாகவும் அது இருக்காது.
ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான திருமண பந்தமே சிங்கப்பூர் சமூகக் கட்டமைப்பின் அடித்தளமாகும் என்று கல்வி அமைச்சு கூறியது.
சென்ற ஞாயிற்றுக்கிழமை தமது தேசிய நாள் பேரணி உரையின்போது ஆண்களுக்கு இடையிலான ஒத்த பாலீர்ப்புடைய உறவைக் குற்றச்செயலாக வகைப்படுத்தும் சட்டப் பிரிவு 377ஏ நீக்கப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார்.
இதையடுத்து ஒர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான திருமண பந்தத்தைப் பாதுகாக்க அரசியலமைப்பு திருத்தம் இடம்பெறவிருக்கிறது.
"சிங்கப்பூரின் குடும்பப் பண்புகள், சமூக நெறிமுறைகள் தொடர்ந்து சிங்கப்பூரர்களால் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
அவற்றை வெளிநாட்டவர்கள், வெளிநாட்டு அமைப்புகள் மதித்து நடக்க வேண்டும். தங்களுடைய சொந்த விருப்பங்களைப் புகுத்த கல்வி நிலையங்களை ஒரு தளமாக அவர்கள் பயன்படுத்தக் கூடாது," என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டது.
"கல்வி நிலையங்களில் பரஸ்பர புரிந்துணர்வு, மதித்து நடப்பது, அனைவரிடமும் பரிவு காட்டுவது போன்ற பண்புகளை எல்லா மாணவர்களும் கற்றுக்கொள்வார்கள்.
"எங்கள் கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படும் பாலியல் கல்வி, மதச்சார்பற்ற, பாரம்பரிய பண்புகள் மற்றும் பல இன சமுதாய உணர்வு களுக்கு மதிப்பளிக்கும் சமூகம் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். கேலி, கலாசாரத்தை இழத்தல் போன்றவை கல்வி நிலையங் களிலும் சமூகத்திலும் காலூன்ற அனுமதிக்கக்கூடாது.
பிள்ளைகளுக்கு வழிகாட்ட பெற்றோருடன் கல்வி நிலையங்கள் இணைந்து செயல்படும். மாணவர் களின் தேவைக்கு ஏற்ப ஆலோசனைகளும் சமூக உணர்விலான ஆதரவும் வழங்கப்படும்," என்று கல்வி அமைச்சு கூறியது.