திவ்யாதாக் ஷாய்னி
சிங்கப்பூரின் நான்கு சுய உதவி அமைப்புகளும் இணைந்து ஈராண்டுக்குப் பிறகு மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டி, நேரடி விருதளிப்பு விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற 786 மாணவர்களுக்கு சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம், மெண்டாக்கி, யூரேஷியர் சங்கம், சீனர் மேம்பாட்டு உதவி மன்றம் ஆகியவை ஒன்றிணைந்து விருது வழங்கின.
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கடந்த மாதம் 20ஆம் தேதியன்று ‘19வது கூட்டு-துணைப்பாட விருது’ நிகழ்ச்சியில், பிஎஸ்எல்இ, வழக்கநிலை, சாதாரணநிலைத் தேர்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு $100 முதல் $150 பெறுமானமுள்ள புத்தகப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
படிப்பில் முன்னேற்றம் கண்ட மாணவி தஸ்பிஹா இப்ராஹிம், 17, $100 மதிப்புள்ள புத்தகப் பற்றுச்சீட்டைப் பெற்றார். இவர் ஜிசிஇ வழக்கநிலைத் தேர்வில் அடைந்த சிறப்புத் தேர்ச்சிக்கு சிண்டாவின் ‘ஸ்டெப்’ துணைப்பாட வகுப்புகள் கைகொடுத்ததாகக் கூறினார்.
தற்போது தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தாதிமைத் துறையில் பயின்றுவருகிறார் தஸ்பிஹா. தன் தந்தையின் வருமானத்தை மட்டும் தன் குடும்பம் நம்பி
யிருப்பதால் தான் படிப்பில் சிறந்து விளங்கி, வேலைக்குச் சென்று தந்தைக்கு உதவ வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளார் இவர்.
கைப்பந்து விளையாட்டில் ஆர்வங்கொண்ட ஸ்ரீராம் ரோஜின், 17, ஜிசிஇ சாதாரண நிலைத் தேர்வுப் பிரிவில் சிறந்த மாணவருக்கான விருதைப் பெற்றார்.
கைப்பந்து விளையாட்டுக்கும் படிப்பிற்கும் சரிவர நேரம் ஒதுக்க முடியாததால் படிப்பில் சற்றுப் பின்தங்கியிருந்தார்.
அப்போது தன்னுடைய ஸ்டெப் துணைப்பாட ஆசிரியர்கள் தனக்குக் கைகொடுத்தாகக் கூறுகிறார். அவர்களின் ஆதரவில் தன் நேரத்தைச் சரியாக வகுத்துக்கொண்டு விளையாட்டிலும் படிப்பிலும் சிறந்து விளங்க முடிந்ததாக சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இயந்திரப் பொறியியல் துறையில் முதலாமாண்டு மாணவராக பயிலும் ஸ்ரீராம் குறிப்பிட்டார்.
தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுப் பிரிவில், தலைசிறந்த மாணவர் விருதினை இஷா மனோஜ், 13, பெற்றார். இது தனக்குப் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் மேலும் பல சாதனைகளை அவர் நிகழ்த்த ஊக்குவிப்பதாகவும் கூறினார்.
இரண்டாம் கல்வி அமைச்சர் டாக்டர் முஹம்மது மாலிக்கி ஒஸ்மான் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விருது வழங்கினார்.
கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலால் கடந்த ஈராண்டுகாளக மாணவர்களின் சாதனைகளை ஆரவாரத்துடன் கொண்டாட முடியவில்லை என்று சிண்டாவின் தலைமை அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.
“மாணவர்களின் சாதனை
களைக் கொண்டாடுவது இதுபோன்ற விருதுகளின் முக்கிய நோக்கமாக இருந்தாலும் அடுத்தடுத்த நிலைகளில் இருக்கக்கூடிய மாணவர்களின் வெற்றிக்கு இந்தக் கொண்டாட்டம்தான் ஓர் ஆரம்பப்புள்ளியாக இருக்கப் போகிறது,” என்று திரு அன்பரசு தெரிவித்தார். படங்கள்: சிண்டா