இரண்டாம் முறையாக சிண்டா உன்னத விருதை கெஜேந்திரன் பெற்றுள்ளார். இவர் ஒற்றைப் பெற்றோரான தன் தாயின் அர
வணைப்பில் மிகுந்த பொருளாதார சிரமங்களுக்கிடையே வளர்ந்தவர். தனக்காக தாயார் அனுபவித்த இன்னல்களைப் பார்த்து வளர்ந்த இவர், அந்தத் தாயின் துயரைத் துடைப்பதற்காகவே கல்வியில் தன் மொத்த கவனத்தையும் செலுத்தினார்.
உயர்நிலைப்பள்ளி காலத்தில் சாதாரண (ஏட்டுக்கல்வி) பிரிவில் பயின்ற பிறகு பலதுறைத் தொழிற்கல்லூரியில் தேர்ச்சி பெற்றார். இதனால் இவருடைய தேசிய சேவையும் பல்கலைக்கழகப் படிப்பும் தள்ளிப்போயின. ஆயினும் அதிக முதிர்ச்சியுடனும் பக்கு வத்துடனும் வாழ்வை அணுக இந்நீண்ட பயணம் உதவியதாக கெஜேந்திரன் கூறினார்.
இவ்வாண்டின் பட்டக்கல்விப் பிரிவில் விருது வென்றிருக்கும் இவர், 2016ஆம் ஆண்டு பட்டயக் கல்விப் பிரிவின்கீழ் வழங்கப்பட்ட சிண்டா உன்னத விருதினையும் பெற்றார். தன்னுடைய இளங்
கலைப் பட்டப் படிப்பிற்காக 'கேபிஎம்ஜி சிங்கப்பூர்' எனும் தணிக்கை, வரி மற்றும் ஆலோசனை சேவை வழங்கும் நிறுவனத்தின் உபகாரச் சம்பளத்தைப் பெற்றார். இந்த உபகாரச் சம்பளம் தன் தாயின் சுமையை ஓரளவு குறைத்தது என்று நினைவுகூர்ந்த இவர், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் வணிக நிர்வாகத்தில் இரட்டைப் பட்டத்துடன் உன்னதத் தேர்ச்சி பெற்றார்.
தற்சமயம் அதே நிறுவனத்தில் உத்தி ஆலோசக பட்டதாரி ஊழியராகப் பணிபுரிகிறார். கல்வியின் சிறப்பை சிறுவயதிலேயே உணர்ந்த இவர், முதுகலைப் பட்டம் மேற்கொள்ளும் எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்தார்.