பொதுச் சேவையில் உன்னதத் தொண்டாற்றிய அனுபவமிக்க மூன்று மூத்த உயரதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
'டிஸ்டிங்குவிஷ்ட் சர்விஸ் ஆர்டர்அ' எனும் உன்னதச் சேவைக்கான விருதை அதிபர் ஹலிமா யாக்கோப்பிடமிருந்து அவர்கள் நேற்று பெற்றுக்கொண்டனர்.
சுகாதார அமைச்சின் தலைமைச் சுகாதார விஞ்ஞானியான பேராசிரியர் டான் சோர் சுவான், முன்னாள் பொதுத்தூதர் கோபிநாத் பிள்ளை, பொதுச் சேவைப் பிரிவின் தலைவர் லீ சு யாங் ஆகியோர் அந்த விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
பேராசிரியர் டான், கொவிட்-19 நெருக்கடியின்போது கிருமிப் பரவல் தயார்நிலை, தடுப்பூசித் திட்டம் போன்ற முக்கிய நடவடிக்கைகளில் பங்களித்தவர். கடந்த 2003ஆம் ஆண்டு சார்ஸ் நெருக்கடியின்போதும் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்.
திரு பிள்ளை ஏறக்குறைய 30 ஆண்டுகளாக தெற்கு ஆசிய நாடுகளுடனான சிங்கப்பூரின் உறவுகள் செழிப்பதில் பங்களித்தவர். இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் புதிய தலைநகரம், சிங்கப்பூரில் இந்திய மரபுடைமை நிலையம் ஆகியவற்றின் உருவாக்கத்தில் இவரது பங்கு முக்கியமானது.
திரு லீ, அரசாங்கச் சேவைக்கான ஆள்சேர்க்கை அணுகுமுறையை மேம்படுத்தியவர். உபகாரச் சம்பளம் பெற்ற மாணவர்கள் அரசாங்கச் சேவையில் ஈடுபட அது வுழிவகுத்தது. நேற்று மொத்தம் 21 பிரிவுகளில் 6,258 பேர் தேசிய தின விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.