ஹெண்டர்சன் ரோட்டில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட நெருப்பை அணைத்துக் கொண்டிருந்தபோது , சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தீயணைப்பு வீரர் ஒருவர் மயங்கி விழுந்தார்.
அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
ஹெண்டர்சன் ரோடு புளோக் 91ன் நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தீப் பிடித்துக் கொண்டது.
அது பற்றி இன்று காலை 11.10 மணி அளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியது.
நெருப்பை அணைப்பதற்காக அதிகாரிகள் கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் செல்ல வேண்டியிருந்தது.
சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்றில், வீட்டிலிருந்து புகை மேல் எழுந்ததைக் காண முடிந்தது.
இச்சம்பவம் பற்றி தகவல் பெற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைத் தொடர்பு கொண்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.