வாக்குவாதத்தைத் தொடர்ந்து ஆயுதத்தைப் பயன்படுத்தி பயணி ஒருவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் ‘டிரான்ஸ்கேப்’ டாக்சி ஓட்டுநர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புளோக் 107, பிடோக் நார்த் ரோட்டில் நடந்த சம்பவம் குறித்து மார்ச் 12ஆம் தேதி மாலை 6.30 மணிக்குத் தனக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.
ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு காயம் ஏற்படுத்தியதற்காக அந்த 69 வயது ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.
மூன்று பேர் உள்ள குடும்பமான தமது பயணிகளை வெவ்வேறு இடங்களில் இறக்கிவிட ஒப்புக்கொண்ட பிறகு அந்த ஏற்பாட்டிலிருந்து பின்வாங்கியதால் வாக்குவாதம் தொடங்கியதாக ஷின் மின் நாளிதழ் கூறியது.
அந்தக் குடும்பத்தார் ஹவ்காங்கில் டாக்சியில் ஏறினர். பின்னர் தவறான இடம் குறிப்பிடப்பட்டதை அவர்கள் அறிந்தனர். முதலில் புளோக் 95, பிடோக் நார்த் அவென்யூ 4க்குச் சென்றபிறகு, புளோக் 106 பிடோக் நார்த் ரோட்டுக்குச் செல்லுமாறு அவர்கள் ஓட்டுநரைக் கேட்டுக்கொண்டனர்.
இருப்பினும், ஓட்டுநர் கடைசி இடத்திற்கு மட்டுமே சென்றதால் பிரச்சினை எழுந்தது.
ஓட்டுநர் திருப்புளியைப் பயன்படுத்தி பயணிகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சண்டை காரணமாக 39 வயது ஆடவர் ஒருவருக்குச் சிறிய வெட்டுகள் ஏற்பட்டன. இருப்பினும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ அதிகாரிகள் அவரைச் சோதித்த பிறகு, அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படவில்லை.
முப்பது வயது மதிக்கத்தக்க மாதும் ஏறக்குறைய 8 வயதிலான சிறுவனும் அவருடன் இருந்ததாக ஷின் மின் கூறியது.