மறைந்த முன்னாள் தலைமை நீதிபதி யோங் பங் ஹாவ் தமது பணியில் கடந்துவந்த மைல்கல்களைப் பற்றி மூத்த நீதிபதி ஆண்ட்ரூ பாங் புதிய சுயசரிதை நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
டாக்டர் யோங் தமது 98ஆவது பிறந்தநாளை ஏப்ரல் 11ஆம் தேதி கொண்டாடியிருப்பார் என்பதை அனுசரிக்கும் விதமாக புத்தக வெளியீடும் அதே தினத்தன்று நடந்தது.
டாக்டர் யோங் 1990ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். இவர் 2020ல் தமது 93வது வயதில் ஜனவரி 9ஆம் தேதி மாண்டார்.
தமது பணிக்காலத்தின்போது கடுமையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதுடன் டாக்டர் யோங், சிங்கப்பூரின் நீதிமன்ற அமைப்புமுறையைச் சீர்படுத்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.
கனிவாகப் பேசும் அவரது குணவியல்பைப் பற்றி முன்னாள் நீதிபதிகளின் சட்ட எழுத்தர்கள் 64 பேர் இந்நூலில் நினைவுகூர்ந்துள்ளனர்.
புத்தக வெளியீட்டில் 400க்கும் மேற்பட்ட விருந்தினர்களுடன் பிரதமர் லீ சியன் லூங்கும் கலந்துகொண்டார்.