சிறிய பெட்டிக்கடையாகத் தொடங்கி இப்போது பெரிய புத்தக நிலையமாக வளர்ந்துள்ளது 'தேக்கா 777 புத்தக நிலையம்'.
தமிழ் இலக்கிய வரலாற்றுப் புத்தகங்களில் தொடங்கி சிறுவர்களுக்கான தமிழ் எழுத்து புத்தகங்கள் வரை இக்கடையில் பலவகை தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் விற்கப்படுகின்றன.
கடையின் முன்னேற்றம் குறித்து அங்கு விற்பனை உதவியாளராக உள்ள திருமதி ரேகா சொக்கலிங்கம், 33, நம்மிடம் விளக்கினார்.
"பெட்டிக்கடையாக இருந்தபோது நிறைய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கடைக்கு வந்து விரும்பிய தமிழ் புத்தகங்களைக் கேட்டு வாங்கிச் சென்றனர். ஈடுபாட்டுடன் தமிழ் புத்தகங்கள் கேட்டு வரும் வாடிக்கையாளர்கள் இல்லை என்று திரும்பிவிடக்கூடாது என்பதற்காகவே பெரிய கடையாக திறந்து பல வகை புத்தகங்களை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்ய தொடங்கினோம். பெரிய கடையை தொடங்கிய மூன்று மாதங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
"சமயம் சார்ந்த புத்தகங்கள், புராணக் கதை புத்தகங்கள், திருக்குறள் புத்தகங்கள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
"கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வயதினர் அல்லது அதற்கும் மேற்பட்டவராகவே உள்ளனர். இளை யர்களின் எண்ணிக்கை குறைவுதான். இனிவரும் தலைமுறையினருக்கு சிறுவயதிலிருந்தே தமிழ்ப் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தால் தமிழ் இலக்கியம் தொடர்ந்து வளரும்.
"இப்போது புத்தகங்கள் அனைத்தும் இணையம் வழி மின்சேவையில் மக்களை அடைகின்றன.
"இருப்பினும் கைப்பட புத்தகத்தைத் தேர்வு செய்து, வாங்கி அதன் பக்கங்களைத் திருப்பி படிக்கும் உணர்வுக்கு ஈடாகாது.
"மின் புத்தக சேவைகள் அதி
கரித்தாலும் புத்தகங்களை வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையாது என்பது எங்களின் நம்பிக்கை," என்றார்.