ப. பாலசுப்பிரமணியம்
மனதளவிலும் பொருளாதார ரீதியிலும் பாதிப்பு.
எப்போது கொவிட்-19 நிலவரம் மேம்படும் என்ற கவலையுடன் அன்றாட சவால்களைச் சமாளித்தவாறு வாழ்ந்துகொண்டிருக்கும் வசதி குறைந்த குடும்பங்கள்.
இவர்கள், பண்டிகைக் காலத்திலாவது கவலைகளை மறந்து, மகிழ்ச்சியாகக் கொண்டாட உதவி செய்கிறது ஒரு தொண்டூழியக் குழு.
'இதயங்களுக்கு ஒளியூட்டுதல், இல்லங்களுக்கு ஒளியூட்டுதல்' என்ற திட்டத்தின் கீழ் செயல்படும் தொண்டூழியர்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தீபாவளி அன்பளிப்புப் பைகளை வழங்கி ெகாண் டாட்ட உணர்வைப் பெருக்கி வரு கின்றனர். 2013ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையில் 2,400க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் உதவியுடன் 6,900க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள், தீபாவளிப் பலகாரங்களுடன் அண்மைய ஆண்டு களில் 'அங் பாவ்' ரொக்க உறையும் வழங்கப்பட்டுள்ளன.
இக்காலக்கட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட நன்கொடை தொகையை இந்தக் குழுவினர் தங்களுடைய அறப்பணிக்காக திரட்டியுள்ளனர்.
இத்திட்டத்தின்படி, வழக்கமாக தொண்டூழியர்கள் அன்பளிப்புப் பைககளை பொருட்களுடன் நிரப்ப, வாகனம் ஓட்டும் மற்ற தொண்டூழியர்கள் அவற்றை நேரடியாக இல்லங்களுக்கு கொண்டு போய்ச் சேர்ப்பது வழக்கம்.
ஆனால் இம்முறை கொவிட்-19 கட்டுப்பாடுகளால் சிறு மாற்றம் செய்யப்பட்டது.
அன்பளிப்புப் பைகளை தீபாவளிக்கு சில நாட்கள் முன்னதாகவே ஏற்பாட்டுக் குழுவினர் தீவிலுள்ள வெவ்வேறு குடும்ப சேவை நிலையங்களுக்கு அனுப்பிவிட்டனர்.
அந்நிலையங்கள் அவை சேவையாற்றும் குடும்பங்களுக்கு அவற்றை விநியோகம் செய்ய உதவின.
இத்திட்டத்தின் செயல்முறை யிலும் தொண்டூழிய நிர்வாகத்திலும் பங்களித்து வருபவர் 31 வயது திரு கணேசன்.
இவ்வாண்டு அதிகம் பாதிக்கப் பட்ட ஓரறை முதல் மூவறை வீடுகளில் வசிக்கும் குடும்பத்தினரை அன்பளிப்புகள் சென்றடைய வேண்டும் என்று ஏற்பாட்டுக் குழு முடிவு செய்ததாகவும் கடந்த சில ஆண்டு களாகவே இதர சமூக அமைப்புகளும் தனி நபர்களும் பண்டிகை காலத்தில் இதுபோன்ற அறப்பணியில் ஈடுபட்டு வருவது வரவேற்கத் தக்கது என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள திரு கணேசன் தெரிவித்தார்.
இத்திட்டம் அறிமுகமானதில்இருந்து அதற்கு முக்கிய பங்காற்றி வரும் 27 வயது சுகாதார ஆலோசகர் குமாரி அ. விக்னேஸ்வரி, 'பெயர் எழுதப்பட்ட ஒட்டுவில்லை', 'காகிதப் பை', மெழுகு விளக்குகள் போன்ற பொருட்களை பொது மக்களிடமிருந்து நன்கொடையாக பெற சமூக ஊடகங்கள் பேருதவியாக இருந்ததாகச் சொன்னார்.
குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு அன்பளிப்புப் பையிலும் $100 மதிப்புள்ள 'அங் பாவ்' உறை, $30 மதிப்புள்ள 'ஷெங் சியோங்' பேரங்காடியின் பற்றுச்சீட்டு, முறுக்கு, குக்கீஸ், மெழுகு விளக்கு கள் போன்றவை வைக்கப்பட்டிருந்தன.
முறையாக இயங்கும் இந்த அறப்பணிக் குழுவின் முயற்சி களுக்கு ஒட்டு மொத்த சமூகமும் ஊக்கமூட்டுவதாகக் கூறிய சொத்து முகவரான திருமதி சி. இந்திராணி, 41, சில ஆண்டு களுக்கு முன்பு தன்னையும் இணைத்துக் கொண்டு அன்பளிப்பு பைகளை விநியோகம் செய்ய ஆரம்பித்தார். இம்முறை, 700 காகிதப் பைகளை நன்கொடையாக வழங்கிய திருமதி இந்திராணி, இதுபோன்ற சமூக முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட ஆர்வம் காட்டி வருகிறார்.
உதாரணத்திற்கு, இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் இயங்கும் 'ஆஷ்ரம்' மறுவாழ்வு இல்லத்தின் 'நெஞ்சார்ந்த அன்பளிப்பு' திட்டத்தின் கீழ், வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இவர் மளிகைப் பொருட்களை விநியோகம் செய்வதில் உதவி வருகிறார்.
'தாறுமாறு ரன்னர்ஸ்' எனும் பொழுதுபோக்கு ஓட்டக்குழு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டத்திற்கு கைெகாடுத்தபோது அதன் உறுப்பினரான டாக்டர் மைதிலி பாண்டியும் தீவிரமாக தன்னை அறப்பணியில் இணைத்துக் கொண்டார்.
அதிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் இம்முயற்சிக்கு நன்கொடை வழங்கி வரும் இவர், அதற்கு மேலாக அன்பளிப்புப் பைகளில் கொடுக்கப்படும் 'குக்கீஸ்' வகை களை தயாரித்து பொட்டலம் கட்ட வும் உதவி வருகிறார்.
இம்முறை 10 போத்தல்களை நிரப்பக்கூடிய 'சாக்ெலட்சிப்' குக்கீஸ் வகையை பொட்டலமாக மடிப் பதில் தொடக்கப்பள்ளியில் பயிலும் அவரது மூன்று பிள்ளைகளையும் டாக்டர் மைதிலி ஈடுபடுத்தினார். டாக்டர் மைதிலியைச் சேர்த்து மொத்தம் 70 தொண்டூழியர்கள் வீட்டிலிருந்தவாறு குக்கிஸ்களை பொட்டலம் கட்ட உதவினர்.
"பிள்ளைகளை இதுபோன்ற தொண்டூழியங்களில் ஈடுபடுத்தும்போது வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் உணர்கின்றனர். எதிர்காலத்தில் தொண்டூழியம் புரிவது அவர் களுக்கு இயல்பாகிவிடுகிறது," என்று கூறினார் குடும்ப நல மருத்துவரான டாக்டர் மைதிலி, 40.
"அனைவருக்கும் ஒரு நல்ல பண்டிகை கொண்டாட்ட அனுபவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இவ்வாண்டுத் திட்டத்தில் சேர்ந்தேன்.
"சமூகத்தில் பின்தங்கியுள்ளவர் களை மறந்துவிடாமல் அவர்களுக் குள் பண்டிகை உணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போது அவர்கள் அடையும் மகிழ்ச்சியைக் காணும் போது நமக்கும் மனநிறைவு ஏற்படு கிறது," என்றார் திட்ட ஏற்பாட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள அரசாங்க ஊழியரான 23 வயது குமாரி அஹல்யா ஜனார்த்தனன்.
கிட்டத்தட்ட 700 குடும்பங் களுக்கு ஒளியூட்டும் விதமாக இம்முயற்சி நடந்தேறியது.
மொத்தம் $80,000க்கும் மேற்பட்ட நன்கொடை இம்முயற்சிக்காக திரட்டப்பட்டது.