"நீ திருமணம் செய்துகொள்ளவேண்டும். உன் குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு இதெல்லாம் மிகவும் சிரமம்."
இவை ராஜ் ஃபுட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இணை நிறுவனர் மற்றும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபையின் இளம் தொழில் முனைவர் விருதை வென்ற குமாரி வித்யா க. நாகராஜனிடம் அவரது தாயார் கூறிய வார்த்தைகள்.
36 ஆண்டுகளுக்கு மேலாக தமது தந்தை நடத்தி வந்த மசாலா கலவை தயாரிக்கும் தொழிற்
சாலையின் இணை இயக்குநராக 2013ஆம் ஆண்டில் பொறுப்பேற்று நிர்வாக வேலைகளைக் கவனித்து வருகிறார் குமாரி வித்யா.
பெண் ஒருவர் மசாலா கலவைத் தொழிற்சாலையை ஏற்று நடத்துவது அரிது. எனவே, இந்த வர்த்தகத்தில் காலடி எடுத்து வைத்த குமாரி வித்யாவைப் பலர் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
கணக்கியல் மற்றும் நிதி சார்ந்த துறையில் பணியாற்றிய இவருக்குத் தொழிற்சாலை தொடர்பான பணிகள், ஊழியர்களை நிர்வகிப்பது போன்றவை புதிய அனுபவமாக இருந்தன.
"தொடக்கத்தில் தொழிற்
சாலைக்கு வந்த முதிய வாடிக்கையாளர்கள் அனைவரும் என்னைப் பார்த்துவிட்டு அதிர்ந்தனர்.
"இளம் பெண்ணான என்னிடம் எப்படி வர்த்தகம் குறித்து பேசுவது என்று எனது தந்தையிடம் கேள்வி எழுப்பினர்," என்று ஆரம்பத்தில் தாம் சந்தித்த சவால்களை குமாரி வித்யா நினைவுகூர்ந்தார்.
சிங்கப்பூரில் பிரபலமான நான்கு மசாலா கலவை வர்த்தகங்களில் இவரதும் ஒன்று.
தந்தையிடமிருந்து பொறுப்பேற்றபின், தொழில்நுட்ப ரீதியாகவும் வாடிக்கையாளர்களின் தேவை களைப் பூர்த்தி செய்யும் விதத்
திலும் பல்வகை மாற்றங்களை அறிமுகப்படுத்தி தந்தையைப்
பெருமையடையச் செய்திருக்கிறார் குமாரி வித்யா.