ஒருமுறை, திருமண விழா
ஒன்றில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றிக்கொண்
டிருந்தபோது மணமகள் அருகில் கேமராவுடன் நின்றுகொண்டிருந்த ஹம்சவள்ளி துரைராஜுவைப் (படம்) பார்த்து அங்கிருந்த ஒருவர், "நீங்கள் மண
மகளுக்கு ஒப்பனை செய்ய வந்த ஒப்பனைக் கலைஞரா?" என்று கேட்டது இன்றும் ஹம்ச வள்ளிக்கு நினைவிருக்கிறது.
புகைப்படத் தொழிலில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதால் அதில் பெண்கள் பெரியளவில் முன்னேறுவது சவாலான ஒன்றாகத் தெரியலாம் என்று கூறிய ஹம்சவள்ளி, ஒரு முழுநேரப் புகைப்
படக் கலைஞராகத் தனக்கென தனி அடையாளத்தை ஏற்
படுத்திக்கொள்வதிலும் பல சவால்களைச் சந்தித்தார்.
13 வயதிலிருந்தே புகைப் படக் கலையில் ஆர்வம் செலுத்தி வரும் ஹம்சவள்ளிக்குத் தற்போது 26 வயதாகிறது.
கடந்த இரண்டு ஆண்டு
களாகச் சொந்த தொழில் அடிப்படையில் முழுநேரப் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார்.
திருமணம், பிறந்தநாள் போன்ற விழாக்களில் புகைப்
படங்கள் எடுப்பது மட்டுமல்லாது, இவரது மற்ற படைப்பு கள் புகைப்படங்களின் வழி காட்சிகளை உருவாக்கி அதன் மூலம் கதைசொல்லும் தனித்துவம் கொண்டவை. இவரின் புகைப்படங்கள் யாவும் பெண்களை மையமாகக் கொண்டவை.
அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒற்றைத் தாய்மார்களுக் காக இவர் சமர்ப்பித்த புகைப்படத் தொடர், மனிதர்களின் செயல்களால் கடல் உயிரி னங்கள் படும் வேதனையைச் சித்திரித்த புகைப்படத் தொடர் எனப் பல அர்த்தங்கள் நிறைந்த படைப்புகளை உருவாக்கி வருகிறார். புகைப்படக் கலையில் கால் எடுத்து வைப்பதற்கு முன்பு வங்கி ஒன்றில் ஹம்சவள்ளி பணியாற்றினார்.
புகைப்படக் கலை மீதான வேட்கை அவரை அதன்
பக்கம் இழுத்தது. மற்ற முழுநேர அலுவலக வேலைகள் போல் இது நிலையான மாதச் சம்பளம் தராவிட்டாலும் தமக்குப் பிடித்த ஒரு தொழிலை சுயமாக செய்து வருவது மன நிறைவை அளிப்பதாக கூறுகிறார் ஹம்சவள்ளி.
"பிறர் கூறும் கருத்துகள் உங்கள் குறிக்கோள்களுக்கும் கனவு
களுக்கும் இடையூறாக இருக்கக்கூடாது. நீங்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று பலர்
கருத்து தெரிவிப்பர். ஆனால் இது உங்கள் வாழ்க்கை.
"உங்களுக்கு மனநிறைவைத் தருவதில் கவனம் செலுத்துங்கள். அதில் முன்னேற்றம் காண முயற்சி செய்யுங்கள்," என்றார் ஹம்சவள்ளி.