வருடாந்திர மரம் நடும் தினத்தை முன்னிட்டு பிரதமர் லீ சியன் லூங் மரக்கன்று ஒன்றை நேற்று நட்டார்.
இதில் சிறப்பு என்னவென்றால் 1963ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூ நட்ட அதே வகை மரக்கன்றை அவரது மகனான
பிரதமர் லீ நேற்று நட்டுள்ளார்.
அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்
பினர்களான திரு டேரல் டேவிட், திரு கான் தியோம் போ, திருவாட்டி இங் லிங் லிங் ஆகியோருடன் இணைந்து திரு லீ ஒன்பது மெம்பாட் மரங்களை நட்டார். இவ்வகை மரங்களில் எழில்மிகு இளஞ்சிவப்பு மலர்கள் பூக்கும்.
மரக்கன்று நடும் நிகழ்வில் கெபுன் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் ஹென்றி குவேக்கும் இயோ சூ காங் நாடாளுமன்ற உறுப்
பினர் யிப் ஹோன் வெங்கும் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வு அங் மோ கியோ அவென்யூ 3ல் நேற்று நடைபெற்றது.