சாம்பியன்ஸ் லீக் காற்பந்து தொடரில் இன்று பின்னிரவு நடைபெற உள்ள காலிறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் சிட்டியும் பிஎஸ்ஜியும் மோதுகின்றன. காயம் காரணமாக விளையாடாமல் இருந்த சிட்டி குழுவின் கோல்காப்பாளர் ஜோ ஹார்ட், இன்றைய ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பு உள்ளதாக கூறினார் அக்குழுவின் மற்றொரு கோல் காப்பாளரான வில்லி கபலெரோ. மேலும், இந்த ஆட்டத்தில் சிட்டி குழுவின் கோல்காப்பாளர் யார் என்பதை பெலிகிரினி இன்னும் உறுதி செய்யாமல் இருப்பதாகவும் தெரிகிறது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக்
ஆட்டமொன்றில் யுனைடெட் குழுவிற்கு எதிராக விளையாடியபோது காயமடைந்த ஜோ ஹார்ட் அதன்பிறகு விளையாடவில்லை. அதனால், போர்ன்மத்-சிட்டி குழுக்கள் மோதியபோது கபலெரோ சிட்டியின் கோல் காப்பாளராக இருந்தார். "பிஎஸ்ஜிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவது பற்றி நான் இதுவரை நிர்வாகியிடம் பேசவில்லை. ஜோவின் உடல்நலம் எந்தளவு முன்னேறியுள்ளது என்பது பற்றியும் தெரியவில்லை. "பிரெஞ்சு லீக் வெற்றியாளர் களான பிஎஸ்ஜி குழுவை எதிர்த்து விளையாடுவது என்பது எளிதான ஒன்றல்ல. "அக்குழுவிற்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் அது மிகப்பெரிய ஒன்றாகும்," என்றார் கபலெரோ. "திறமையான ஆட்டக்காரர் களைக் கொண்ட மிகப்பெரிய குழுவை இன்று பின்னிரவு சந்திக்கிறது சிட்டி. எனவே, கடந்த பருவத்தில் நடந்த தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். "கடந்த பருவத்தில் நியூகாசலை 4-0 என்ற கோல் கணக்கில் வென்ற பிறகு, பார்சிலோனாவுடன் மோதிய ஆட்டத்தில் சிட்டி குழு தோல்வியைத் தழுவியது. "இந்த பருவத்திலும் அதேபோல், கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் போர்ன்மத்தை நாம் 4=0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியுள்ளோம். ஆனால், பிஎஸ்ஜிக்கு எதிரான இன்றைய ஆட்டம் அதுபோல் எளிதாக இருக்கும் என்று நினைத்து விடக்கூடாது. "இது இரண்டு பெரிய குழுக்களுக்கிடையிலான ஆட்டம் என்பதை நாம் உணர்ந்து விளை யாட வேண்டும்," என்று அவர் கூறினார்.
சிட்டி குழுத் தலைவர்
வின்சென்ட் கொம்பானி, ரஹீம் ஸ்டெர்லிங் ஆகிய இருவரும்கூட காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விளையாடமாட்டார்கள். அதேபோல், முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக யாயா தோரே விளையாடுவதும் சந்தேகம் எனக் கூறப்படுகிறது.