மும்பை: இந்திய 'ஏ' அணி, 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்குப் பயிற்சி அளித்ததற்காக இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட்டிற்கு சம்பளமாக மொத்தம் 2.61 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. இதற்கான முதல் தவணையை கடந்த மார்ச் மாதம் கிரிக்கெட் வாரியம் அவருக்கு வழங்கி இருந்தது. அப்போது 1.31 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மீதி தொகையான 1.30 கோடி ரூபாய் இப்போது 2வது தவணையாக வழங்கப்பட்டுள்ளது. இத்து டன் அவரது முழு சம்பளமும் வழங்கப்பட்டுவிட்டதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
இதேபோல் வர்ணணையாளராகப் பணியாற்றிய கவாஸ் கருக்குக் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால கட்டத்துக்கு 89.75 லட்ச ரூபாயும் சிவராமகிருஷ்ணனுக்கு 26.12 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல் பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் அளவிலான போட்டிகள், பயிற்சி முகாம்கள் மற்றும் உள்கட்டமைப் புகளுக்கான மானியமாகவும் இந்த நிதி கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லி கிரிக்கெட் சங்கம் 88.43 லட்ச ரூபாயும் மும்பை கிரிக்கெட் சங்கம் 82.77 லட்ச ரூபாயும் நிதியாக பெற்றுள்ளன.