மும்பை: சச்சின் டெண்டுல்கரின் மகனுக்கு கிடைத்த வாய்ப்பு, சாதனை படைத்த பிரணவ் விற்கு கிடைக்காதது தொடர்பாக தவறான கட்டுக்கதைகள் கூறப்படுகின்றன என்று கூறி யுள்ளார் பிராணவ்வின் தந்தை. மேற்கு மண்டல கிரிக்கெட் அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண் டுல்கர் இடம்பெற்றுள்ளார். ஆனால், பண்டாரி கோப்பைக்கான ஒரு போட்டியில் 1009 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை படைத்த பிரணவ் தனவாடே தேர்வு செய்யப்படாதது குறித்து, சமூக வலைத் தளங்களில் சிலர் கருத்துத் தெரிவித்ததால் சர்ச்சை ஏற் பட்டது. பிரணவ் தேர்வு செய்யப்படாதது குறித்து விளக்கம் அளித்துள்ள அவரது தந்தை பிரசாந்த், "மேற்கு மண்டல அணி வீரர்கள், மும்பை கிரிக் கெட் சங்கத்தின் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணி யிலிருந்து தேர்வு செய்யப்படு கின்றனர்.
"அதில் அர்ஜுன் இடம் பெற்றிருந்ததால் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பிரணவ் அந்த அணியில் இல்லை. ஆனால், பிரணவ் தேர்வு பெறாததற்குத் தவறான கட்டுக்கதைகளை வெளியிடுகின்றனர். "அர்ஜுனும் பிரணவ்வும் நல்ல நண்பர்கள். இருவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் விளையாடி தங்கள் திறமையால் முன்னேறி வருகின்றனர். "அர்ஜுன் ஒரு ஆல்-ரவுண்டர். பிரணவ் ஒரு விக்கெட் காப்பாளர் மற்றும் பந்தடிப்பாளர்," என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.