பாரிஸ்: இவ்வாண்டின் யூரோ கிண்ணப் போட்டியை ஏற்று நடத்தும் பிரான்ஸ் அப்போட்டியின் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் முதல் நாடானது. சுவிட்சர்லாந்து அணியுடன் நேற்று பின்னிரவு நடைபெற்ற ஆட்டம் கோல் ஏதுமின்றி அது சமநிலை கண்டபோதும் தனது 'ஏ' பிரிவில் முதல் இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது பிரான்ஸ். ஆனால் இனிதான் அதற்குப் பலப்பரிட்சை காத்திருக்கிறது. தனது இரு முந்தைய ஆட்டங் களில் அல்பேனியா, ருமேனியா ஆகிய நாடுகளை வீழ்த்தவே பிரான்ஸ் அணி சற்று திக்குமுக் காடியது.
எனினும் சுவிட்சர்லாந்து அணி யுடனான ஆட்டம் சமநிலையில் முடிந்தபோதும் பிரான்ஸ் மோசமாக விளையாடியது என்று சொல்ல முடியாது. மாறாக, சுவிட்சர்லாந்து இம்முறை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டமும் விறுவிறுப்பாக நடைபெற ஆட்டத்தின் வேகமும் குறையவே இல்லை. முன்னணி ஆட்டக்காரர்கள் பாயட், ஜிரூ போன்றோர் இல்லாமல் களம் இறங்கிய பிரஞ்சு அணிக்கு அதன் முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் வீரர் பால் பொக்பா ஜொலித்தார். இருமுறை அவரது கோல் முயற்சி கோல் கம்பத்தில் பட்டது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுமே தாக்குதகல் களின் வேகத்தைக் குறைத்தன. பிரான்சுக்கு மாற்று ஆட்டக்காரராக வந்த பாயட்டின் ஒரு முயற்சியும் கோல் கம்பத்தில் பட்டு வெளியானது. இதில் கடைசி நிமிடத்தில் பிரஞ்சு ஆட்டக்காரர் பெனால்டி எல்லையில் தனது வீரர் ஒருவரைக் கீழே தள்ளியதாகக் கூறி பென்லாடி வாய்ப்பு கோரியது சுவிட்சர்லாந்து. ஆனால் அது நடுவரால் நிராகரிக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்து வீரர்களுக்கு மத்தியில் பந்துக்காகப் போட்டியிடும் பிரஞ்சு ஆட்டக்காரர் பால் பொக்பா (வலமிருந்து நான்காவது). இந்த ஆட்டத்தில் பொக்பா சுவிட்சர்லாந்து அணியினரைத் தீண்டிக் கொண்டே இருந்தார். இந்த ஆட்டம் கோல் ஏதும் இன்றி சமநிலை யில் முடிந்தது. படம்: ஏஎஃப்பி