தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து பங்ளாதேஷ் தொடரைப் பொதுவான இடத்தில் நடத்த இயான் மோர்கன் விருப்பம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பங்ளாதேஷ் சென்று ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடத் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் டாக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்கு தலில் பலர் உயிரிழந்தனர். இதனால் இங்கிலாந்து கிரிக் கெட் அணியின் வங்காளதேச பயணம் திட்டமிட்டபடி நடை பெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து பேசிய இங்கிலாந்து ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியின் தலைவர் இயான் மோர்கன், "பாதுகாப்பு மிகப்பெரிய விஷயம். இத்தொடரை பொது வான இடத்தில் நடத்தினால் வசதியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த விஷயத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தான் முடிவு எடுக்க முடியும்," என்றார். இந்தச் சம்பவம் குறித்து பங்ளாதேஷ் கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் கருத்துக் கூறுகையில், "இது எதிர்பாராமல் நடந்த சம்பவமாகும். இங்கிலாந்து அணி வருவதற்கு இன்னும் 3 மாதம் உள்ளது. அதற்குள் நிலைமை சீரடைந்து விடும். எனவே, இங்கிலாந்து அணி திட்டமிட்டப்படி பங்ளாதேஷ் வரும் என்று நம்புகிறேன்," என்றார்.