தேசிய காற்பந்துக் குழுவின் கோ ல் கா ப் பா ள ர் க ளு க் கா ன பயிற்றுவிப்பாளர் லீ பீ செங் (படம்) பதவி விலகியுள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக அவர் அந்தப் பதவியை வகித் தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பது முறை எஸ்=லீக் வெற்றியாளர் பட்டத்தை வென் றுள்ள வாரியர்ஸ் எஃப்சி குழு வுடன் திரு லீ இணைவதாக சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் அறிவித்துள்ளது.
"சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்துடன் இணைந்து கடந்த 16 ஆண்டுகளாக நான் பல தேசிய கோல்காப்பாளர் களுக்குப் பயிற்சி அளித்துள் ளேன். "எனது கடுமையான உழைப்பு பலன் அடைந்திருப் பதைக் கண்டு பெருமை அடைகிறேன். என்னிடம் பயிற்சி பெற்ற கோல்காப் பாளர்கள் பலர் காற்பந்துஆட்டங்களின்போது சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். வாரியர்ஸ் குழுவுடன் இணைந்து சிங்கப்பூர் காற்பந்துக்குத் தொடர்ந்து பங்கு அளிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்," என்று திரு லீ தெரிவித்தார்.