ராஜ்கோட்: அந்நிய மண்ணில் ஆடினாலும் ஓட்ட விகிதத்தில் வேகம் காட்டி இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 537 ஓட்டங் களை எடுத்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. அதுபோல இந்திய அணியும் அடித்து ஆடி மளமளவென ஓட் டங்களைச் சேர்க்கும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் மூன்றாம் நாளான நேற்று இந்திய அணியின் பந்தடிப்பு ஆமை வேகத்தில் இருக்க, ஆட்ட நேர முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 319 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அலெஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் கடந்த புதனன்று தொடங்கியது.
ஆளுக்கொரு சதம் அடித்ததுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 209 ஓட்டங்களைச் சேர்ந்த இந்திய ஆட்டக்காரர்கள் முரளி விஜய் (இடது), சேத்தேஸ்வர் புஜாரா. படம்: ஏஎஃப்பி