பேங்காக்: சுசுகி கிண்ணக் காற் பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தை நடப்பு வெற்றியாளரான தாய்லாந்து நெருங்கியுள்ளது. இன்றிரவு பேங்காக்கில் நடை பெறும் அரையிறுதிக்கான இரண் டாவது ஆட்டத்தில் அது மியன் மாருடன் மோதுகிறது.
ஏற்கெனவே மியன்மாரில் நடைபெற்ற அரையிறுதிக்கான முதல் ஆட்டத்தில் தாய்லாந்து 2=0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. எதிரணியின் விளையாட்டரங்கத்தில் அபார வெற்றி பெற்ற தாய்லாந்து, சொந்த மண்ணில் இன்று நடைபெறும் ஆட்டத்தை மிக சுலபமாகக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.