இப்போதிருக்கும் '32 அணிகள்' என்ற நடைமுறையை மாற்றி இன்னும் அதிகமான அணிகள் இடம்பெறும் வகையில் உலகக் கிண்ணக் காற்பந்து இறுதிச் சுற்றுப் போட்டிகளை மாற்றி அமைப்பது பற்றி அனைத்துலகக் காற்பந்துக் கூட்டமைப்பு (ஃபிஃபா) ஆலோசித்து வருவதை அதன் தலைவர் கியானி இன்ஃபேன் டினோ உறுதிசெய்திருக்கிறார்.
சிங்கப்பூரில் கடந்த மூன்று நாட்களாக நடந்த ஃபிஃபா காற் பந்து நிர்வாகிகளுக்கான உச்ச நிலை மாநாட்டில் திரு இன் ஃபேன்டினோ பங்கேற்றார். அதில், மூன்றுவித முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வந் தாலும், பிரிவுக்கு மூன்று அணி கள் என மொத்தம் 16 பிரிவு களில் 48 அணிகள் பங்கேற்கும் முறைக்கு அதிக ஆதரவு இருப்ப தாகக் கூறப்படுகிறது. இம்முறை யில் பிரிவுகளில் முதலிடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்திய சுற்றில் மோதும்.