நேற்று அதிகாலை லெஸ்டர் சிட்டியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற எஃப்ஏ கிண்ணப் போட்டி ஒன்றில் டார்பி கவுண்டி குழுவை எதிர்கொண்ட லெஸ்டர் தனது மைதானத்தில் இவ் வாண்டின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதில் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் லெஸ்டர் சிட்டியின் டெமாராய் கிரே என்ற வீரர் தனி ஒருவராக பல டார்பி கவுண்டி வீரர்களைத் தாண்டி கோல் போட்டு லெஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதி செய்தார். சென்ற வாரக் கடைசியில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவுடனான ஆட்டத்தில் விளையாடிய வீரர்களில் சிலரை மாற்றி குழுவை களமிறக்கியது லெஸ்டர் சிட்டி. இதில் லெஸ்டருக்கான முதல் கோலை ஆண்டி கிங் ஆட்டத்தின் 46ஆம் நிமிடத்தில் போட, 61ஆம் நிமிடத்தில் டார்பி கவுண்டியின் கமாரா பதிலுக்கு ஒரு கோல் போட்டு சமநிலையை ஏற்படுத்தி னார். பின்னர், கூடுதல் நேரத்தில் லெஸ்டரின் வில்ஃபரட் நடிடி ஒரு கோல் போட ஆட்டத்தின் 114 நிமிடத்தில் கிரே போட்ட அற்புதமான கோலால் லெஸ்டர் 3-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றியை உறுதி செய்து கொண்டு அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
டார்பி கவுண்டி - லெஸ்டர் சிட்டி அணிகளுக்கிடையிலான போட்டியில் லெஸ்டருக்காக கோல் புகுத்தி அந்த அணியின் வெற்றியை உறுதி செய்த டெமாராய். படம்: ராய்ட்டர்ஸ்