லண்டன்: மான்செஸ்டர் சிட்டிக்கு எதிராக லிவர்பூல் நாளை அதிகாலை களமிறங்குகிறது. தற்போது இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் முதல் ஆறு இடங்களை வகித்து வரும் குழுக்களுடன் முன்பு மோதிய ஆட்டங்களில் லிவர்பூல் பலமுறை வெற்றியைச் சுவைத்துள்ளது. இதனால் தங்களது குழு மீண்டும் வெற்றி பெறும் என்று லிவர்பூல் ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர். முதல் ஆறு இடங்களில் இருக்கும் குழுக்களுக்கு எதி ராகக் களமிறங்கிய கடந்த ஒன்பது லீக் ஆட்டங்களில் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட், ஆர் சனல், ஸ்பர்ஸ், செல்சி ஆகிய குழுக்களுடன் மோதிய ஐந்து ஆட்டங்களை லிவர்பூல் கைப் பற்றியுள்ளது. இருப்பினும், நாளை நடை பெறும் ஆட்டத்தில் தனது வீரர்கள் மெத்தனத்துடன் இருந்து விடக்கூடாது என்று லிவர்பூல் குழுவின் நிர்வாகி யர்கன் கிளோப் எச்சரிக்கை விடுத் துள்ளார்.
சிட்டியை எச்சரிக்கையுடன் அணுகும் கிளோப். படம்: ராய்ட்டர்ஸ்