சுதாஸகி ராமன்
கனமான குப்பைத் தொட்டி களிலிருந்து குப்பையை அகற்றும் பணியில் தினமும் ஈடுபடுபவர் துப்புரவாளரான 53 வயது திரு ரகு பாலகிருஷ்ணன். அவ்வாறு ஒரு நாள் குப்பைத் தொட்டி ஒன்றைத் தூக்கியதில் அவரது இடுப்பிலும் முதுகிலும் திடீரென வலி ஏற்பட்டது. கூர்மையான கத்தியால் குத்து வது போன்ற வலியை முதுகு பகுதியில் உணர்ந்த திரு ரகு விற்கு மருத்துவர்கள் அளித்த மாத்திரைகளும் கைகொடுக்க வில்லை. இத்துடன், அவரது வலது காலும் மரத்து போய், பத்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சி யாக நடக்க முடியாத சூழலை ஏற்படுத்தியது. கனமான பொருட்களைத் தூக்கியதன் விளைவாக இடுப்புப் பகுதியில் உள்ள நரம்புகள் முதுகெலும்பின் அடிப்பகுதியில் அதிகமாக அழுத்தம் கொடுத்து உள்ளன என்றும் முதுகெலும்பின் அடிப்பகுதியில் உள்ள சில எலும்பு கள் இதனால் நகர்ந்துள்ளன என் றும் ஊடுகதிர் (xray) சோதனைகள் மூலம் திரு ரகு அறிந்துகொண்டார்.
மூட்டுவீக்கத்தால் பாதிக்கப்பட்ட ரகுவிற்கு அதனைப் பற்றி எடுத்துரைக்கும் கூ டெக் புவாட் மருத்துவ மனையின் எலும்பியல் துறை மருத்துவர் அரவிந்த் குமார் (இடது). படம்: கூ டெக் புவாட் மருத்துவமனை