இந்தியா-பாக். நேரடி கிரிக்கெட் கிடையாது

புதுடெல்லி: இந்தியா=பாகிஸ் தான் இடையே நேரடி கிரிக்கெட் தொடர் கிடையாது என்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். இந்திய=பாகிஸ்தான் எல் லைக்கோடு அருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், தீவிரவாகள் ஊடுருவலுக்குத் துணை புரி கிறது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. எனவே, எல்லை கடந்த தீவிரவாதத் தாக்குதல் நிறுத்தப் படும் வரை இந்தியா - பாகிஸ் தான் அணிகளுக்கு இடையில் நேரடி கிரிக்கெட் தொடர் நடைபெறாது என பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற வேண்டுமென்றால் மத்திய அர சின் முடிவைப் பெறுவது கட்டாயம். பிசிசிஐ மத்திய அரசிடம் பலமுறை அனுமதி கேட்டது. ஆனால், மத்திய அரசு திட்டவட்டமாக அதை நிராகரித்து விட்டது. இந்நிலையில் அமித் ஷாவிடம், இந்திய - பாகிஸ்தான் இடையே நேரடி கிரிக்கெட் தொடர் மீண்டும் தொடங்கி நடைபெறுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமித் ஷா பதிலளிக் கையில் "அனைத்துலகத் தொடர் களில் இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும். ஆனால், இந்தியா பாகிஸ்தான் மண் ணிலோ, பாகிஸ்தான் இந்திய மண்ணிலோ விளையாடாது'' என்றார். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!