பிரிஸ்டல்: பெண்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்குப் போட்டியை ஏற்று நடத்தும் இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. பிரிஸ்டலில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் மூன்று முறை கிண்ணம் ஏந்தியுள்ள இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவுடன் மோதியது. பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த தென்னாப் பிரிக்காவுக்குத் தொடக்கம் சரியாக அமையவில்லை.
லிசெல் லீ 7 ஓட்டங்களுடனும் திரிஷா ஷெட்டி 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர், ஜோடி சேர்ந்த லாரா வோல்வர்த், மிக்னன் டு பிரீஸ் இருவரும் அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். ஆனாலும் இங்கிலாந்தின் பந்துவீச்சை தென்னாப்பிரிக்க அணியால் சமாளிக்க முடியாமல் போனது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் களில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளுக்கு 218 ஓட்டங் கள் எடுத்தது. வோல்வர்த் (66 ஓட்டங்கள்), மிக்னன் டு பிரீஸ் (ஆட்டமிழக் காமல் 76 ஓட்டங்கள்), அரைசதம் அடித்தனர். அணித் தலைவர் வான் நீகெர்க் 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
தென்னாப்பிரிக்காவின் திரிஷா ஷெட்டியை (இடது) 'ரன் அவுட்' முறையில் ஆட்டமிழக்கச் செய்த இங்கிலாந்தின் நெட்டேலி ஸ்கைவர் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்