இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி

பிரிஸ்டல்: பெண்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்குப் போட்டியை ஏற்று நடத்தும் இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. பிரிஸ்டலில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் மூன்று முறை கிண்ணம் ஏந்தியுள்ள இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவுடன் மோதியது. பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த தென்னாப் பிரிக்காவுக்குத் தொடக்கம் சரியாக அமையவில்லை.

லிசெல் லீ 7 ஓட்டங்களுடனும் திரிஷா ஷெட்டி 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர், ஜோடி சேர்ந்த லாரா வோல்வர்த், மிக்னன் டு பிரீஸ் இருவரும் அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். ஆனாலும் இங்கிலாந்தின் பந்துவீச்சை தென்னாப்பிரிக்க அணியால் சமாளிக்க முடியாமல் போனது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் களில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளுக்கு 218 ஓட்டங் கள் எடுத்தது. வோல்வர்த் (66 ஓட்டங்கள்), மிக்னன் டு பிரீஸ் (ஆட்டமிழக் காமல் 76 ஓட்டங்கள்), அரைசதம் அடித்தனர். அணித் தலைவர் வான் நீகெர்க் 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

தென்னாப்பிரிக்காவின் திரிஷா ஷெட்டியை (இடது) 'ரன் அவுட்' முறையில் ஆட்டமிழக்கச் செய்த இங்கிலாந்தின் நெட்டேலி ஸ்கைவர் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!