குல்தீப்: உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது

குல்தீப்: உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது

1 mins read
facb50c5-ebe4-4bf8-9d3f-739b091c2026
ழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் -
Google News Preferred Icon

புதுடெல்லி: இங்கிலாந்தில் நடக்கும் 50 ஓவர் உலகக் கிண்ணத்தை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரி வித்துள்ளார். இங்கிலாந்தில் மே மாதம் 30ஆம் தேதி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தொடங்கு கிறது. கடந்த உலகக் கிண்ணத் தொடருக்குப்பின் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தி வரும் இங்கிலாந்து அணி கிண்ணத்தை முதன் முறையாக வெல்ல வாய்ப் புள்ளதாக கருதப்படுகிறது. அதேபோல் இந்தியாவும் உலகக் கிண்ணத்தை வெல்லும் சாதகமான அணி கள் பட்டியலில் முன்னிலை வகிக் கிறது. இந்நிலையில் இந்தியா உலகக் கிண்ணத்தை வெல் லும் என குல்தீப் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் "உலகக் கிண் ணத்தை நம் சொந்த நாட்டிற்கு கொண்டுவர அதிக அளவி லான வாய்ப்பு உள்ளது. நம்மைத் தவிர்த்து மற்ற அணிகளும் அதிக அளவில் வலிமையாக உள்ளன.