லியோன்: பெண்களுக்கான உலகக் கிண்ணக் காற்பந்து தொடரில் நெதர்லாந்து அணி முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சுவீடன் குழுவுடன் மோதிய நெதர்லாந்து, 1=0 எனும் கோல் கணக்கில் வென்றது. தொடக்கத்தில் ஆக்ரோஷமாக விளையாடிய சுவீடன் வீராங்கனைகளுக்கு பல கோல் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், நெதர்லாந்தின் தடுப்பாட்டம் சிறப்பாக இருந்ததால் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் முடியும்வரை இரு குழுக்களும் கோல் எதுவும் அடிக்க வில்லை. எனவே கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. சுவீடன் வீராங்க னைகள் சற்று சோர்வுடன் காணப் பட்டனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய நெதர்லாந்து அதன் வெற்றி கோலை அடித்தது.