சிட்னி: சிட்னியில் 2015 உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் 93 பந்துகளில் 105 ஓட்டங்கள் அடித்தது அநேகமாக என்னுடைய சிறந்த ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்சாக இருக்கும் என ஆஸ்திரேலியப் பந்தடிப்பாளர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்றது.
சிட்னியில் நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
முதலில் பந்தடித்த ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 328 ஓட்டங்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் 93 பந்துகளில் 105 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் 329 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 233 ஓட்டங்களில் சுருண்டு 95 ஓட்டங்களில் தோல்வியைச் சந்தித்தது.
இந்தத் தொடரில் தொடர்ச்சியாக ஐந்து முறை 50 ஓட்டங்களுக்கு மேல் அடித்த ஸ்மித், இந்தியாவுக்கு எதிராக மட்டும் சதம் அடித்தார்.
“இதுதான் என்னுடைய சிறந்த ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்சாக இருக்கும்,” என ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘அநேகமாக என்னுடைய சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் அதுவாகத்தான் இருக்கும்.
“எனது சொந்த நாட்டில், என்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் பார்க்க உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் நடப்பு வெற்றியாளர் அணிக்கு எதிராக அந்தச் சதம் கிடைத்தது,’’ என்றார்.