கிங்ஸ்டன்: நிறவெறிக்கு பலியான ஜார்ஜ் ஃபிளாயிட் விவகாரம் குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர், இது மவுனத்துக்கான நேரமல்ல. நிறவெறி, சமூக அநீதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய காலம் என அறைகூவல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள டேரன் சமி, “நிறவெறி அமெரிக்காவுடன் முடிவடைவதில்லை, இது உலகம் முழுவதும் உள்ளது.
"என் சகோதரன் கழுத்தில், போலிஸ் ஒருவர் முட்டிக் காலால் மிதித்த காணொளியைப் பார்த்த பிறகு கிரிக்கெட் உலகம் இன்னும் ஏன் மவுனம் சாதிக்கிறது.
"ஐசிசி மற்றும் கிரிக்கெட் வாரியங்கள் என்னை போன்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை இன்னுமா உணரவில்லை?
"எங்களுக்காக, கறுப்பினத்தவருக்காக நீங்கள் சமூக நீதி கேட்க மாட்டீர்களா? சமூக அநீதிகளுக்கு எதிராக பேச மாட்டீர்களா?
"இது அமெரிக்கா சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, இது அன்றாடம் நடக்கிறது. இப்போது மவுனத்துக்கான நேரமல்ல, நான் உங்கள் குரல்களைக் கேட்க விரும்புகிறேன்,” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.