காக்லியரி, இத்தாலி: யூரோ 2020 போட்டிக்குத் தன்னைத் தயார்ப்
படுத்தி வரும் இத்தாலி அணி நேற்று முன்தினம் நடைபெற்ற நட்பு முறை ஆட்டம் ஒன்றில் எதிரணியான சேன் மரினோவைப் புரட்டி எடுத்தது.
இத்தாலியின் பெரிய தீவு நகரான சார்டினியாவில் நடைபெற்ற ஆட்டம் தொடக்கம் முதல் முப்பது நிமிடங்கள் வரை திகில் நிறைந்ததாக இருந்தது.
மரினோ அணியினரின் கோல் முயற்சி அனைத்தையும் தடுக்கும் முனைப்பில் தீவிரம் காட்டிய அதேவேளை தங்கள் தரப்பு கோல் மீதும் இத்தாலி அணியினர் ஒரு கண் வைத்திருந்தனர்.
31வது நிமிடத்தில் அணித் தலைவர் ஃபெடரிகோ பெர்னார்டெச்சி முதல் கோலைப் புகுத்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
அந்த அதிர்ச்சியிலிருந்து மரினோ வீரர்கள் மீள்வதற்குள் அடுத்த மூன்றாவது நிமிடத்தில் இரண்டா வது கோலை கியன் மார்கோ ஃபெராரி போட்டார். இது அவரது அறிமுக ஆட்டம். இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்தில் மேட்டியோ பொரிட்டானோவும் தனது வேகத்தைக் காட்டியதன் விளைவாக மூன்றாவது கோல் விழுந்தது.
அதற்கு அடுத்த இரு கோல்
களையும் ஆண்ட்ரியா பெலோட்டியும் மாட்டியோ பெசினாவும் போட 5-0 என்று இத்தாலியின் ஆக்கிரமிப்பில் ஆட்டம் செல்லத் தொடங் கியது. அந்த அணியினரின் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்தும் மரினோவின் முயற்சி எதுவும் கைகூடவில்லை. அதற்குள் பெலிட்டோவின் இரண்டாவது கோலும் விழ, எண் ணிக்கை ஆறு ஆனது. ஆட்டம் முடியும் தறுவாயில் பெசினாவும் தமது இரண்டாவது கோலைப் புகுத்த 7-0 என்ற கணக்கில் இத்தாலி வென்றது. அந்த அணியின் கோல் மழையை எதிரணியால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
வரும் வெள்ளிக்கிழமை மற்றொரு நட்பு முறை ஆட்டத்தில் செக் குடியரசுடன் இத்தாலி மோதவிருக்கிறது.
பின்னர் நேரடியாக யூரோ 2020 ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ண ஆட்டத்திற்குள் நுழையும் இத்தாலி, தொடக்க ஆட்டத்தில் துருக்கியையும் பின்னர் சுவிட்சர்லாந்தையும் அதற்கடுத்து வேல்ஸ் அணியையும் சந்திக்கும். அனைத்து ஆட்டங் களும் ரோம் நகரில் நடைபெறும்.
யூரோ 2020 ஆட்டங்கள் ஜூன் 11ல் தொடங்கி ஜூலை 11 வரை நீடிக்கும்.
தம்மிடம் திறன்படைத்த ஆட்டக் காரர்கள் இருப்பதாக இத்தாலி பயிற்றுநர் ரோபர்ட்டோ மன்சினி மார்தட்டுகிறார்.