லிவர்பூல்: இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்தில் லிவர்பூல் அணி பலரையும் அசத்தி வருகிறது. இந்தப் பருவத்தில் அந்தக் குழு விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் கோல் போடத் தவறவில்லை. அத்துடன், கடந்த 17 ஆட்டங்களில் ஒவ்வோர் ஆட்டத்திலும் இரண்டு கோல்கள் போட்டுள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் உயர்நிலை காற்பந்துப் பிரிவில் ஒரு குழுவின் ஈடு இணையற்ற சாதனை என்று கூறப்படுகிறது.
அது மட்டுமல்ல, பிரிமியர் லீக்கில் இதுவரை விளையாடிய 13 ஆட்டங்களில் லிவர்பூல் 39 கோல்கள் போட்டுள்ளதும் ஒரு சாதனை.
லிவர்பூல் அணியின் மிகச் சிறப்பான ஆட்ட பாணியில் அதன் புதிய நட்சத்திரமான டியோகோ ஜோட்டாவுக்கு பெரும் பங்குண்டு.
நேற்று செளத்ஹேம்டனுடனான ஆட்டத்தில் லிவர்பூல் 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதில் இரண்டு கோல்கள் ஜோட்டா போட்டது. மற்ற இரண்டு கோல் கள் தியாகோ அல்காண்ட்ராவும் வெர்ஜில் வான் டைக்கும் போட் டவை. பல காலமாக லிவர்பூலின் மூன்று தாக்குதல் ஆட்டக்காரர்களாக சாலா, சாடியோ மானே, ஃபெர்மினோ செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஃபெர்மினோவின் இடத்தை ஜோட்டா பிடித்துக்கொண்டுள்ளார்.
லிவர்பூலின் மற்ற இரு தாக்குதல் ஆட்டக்காரர்களான சாலா, சாடியோ மானே இருவரும் தங்கள் வேகத்தினாலும் பந்தை கையாளும் லாவகத்தினாலும் ஒரு பக்கம் அசத்துகிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் ஈடுகொடுத்து குறி பார்த்து கோல் போடும் திறமையுடன் விளங்கு
கிறார் ஜோட்டா. இதில் தாக்குதல் வீரராக மைதானத்தின் இடம், வலம், நடு என எந்தப் பகுதியிலும் தாக்கும் திறமையுடன் விளங்குவது இவரது சிறப்பு அம்சம்.