போர்ச்சுகல்: காற்பந்தாட்டம் பொதுவாக ஓர் அணியில் 11 ஆட்டக்காரர்களைக் கொண்டு விளையாடுவது. அதுபோல் அணிக்கு அணி ஏழு வீரர்களைக் கொண்டு 'செவன் எ சைட்' என்று விளையாடுவதும் உண்டு. ஆனால், 11 பேர் கொண்ட ஒரு குழுவுக்கு எதிராக 9 வீரர்களைக் களமிறக்கி ஆட வைத்துப் பார்த்திருக்கிறீர்களா. அப்படி ஒரு விந்தை போர்ச்சுகல் நாட்டில் இடம்பெற்றது. கொவிட்-19 கொள்ளைநோய் கிருமி பெலன்சஸ் என்ற குழுவைப் பதம் பார்க்க அதனால் பென்ஃபிக்கா குழுவுக்கு எதிராக ஒன்பது வீரர்களை மட்டுமே களமிறக்க முடிந்தது.
அந்த ஒன்பது வீரர்களில் இருவர் கோல்காப்பாளர்கள், திடல் விளையாட்டு வீரர்கள் அல்லர். இதில் எப்படியோ முதல் பாதி ஆட்டத்தில் 7 கோல்கள் வாங்கியும் சமாளித்த பெலன்சஸ் குழுவால் இரண்டாம் பாதி ஆட்டத்திற்கு ஆட்டத்தை தொடங்கிய ஒன்பது வீரர்களுக்கு பதிலாக ஏழு வீரர்களை மட்டுமே கள
மிறக்க முடிந்தது. பின்னர், அதிலும் ஒருவர் காயம் காரணமாக விளையாட முடியாமல் போகவே எஞ்சியிருந்தது அறுவர்தான். இதைப் பார்த்த நடுவர் ஆட்டத்தை உடனடியாக நிறுத்தி இந்த சோகத்திற்கு முடிவு கட்டினார்.