புகாரெஸ்ட்: உலக இளையர் சதுரங்கப் போட்டியில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் இந்தியாவின் பிரணவ் ஆனந்த் பட்டம் வென்றுள்ளார்.
பட்டம் வெல்வதற்கு முன்பு கிராண்ட்மாஸ்டர் நிலையையும் அவர் எட்டினார். 15 வயது
பிரணவ் ஆனந்த் இந்தியாவின் 76வது கிராண்ட்மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
ருமேனியாவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு பிரணவ் ஆனந்த் தகுதி பெற்றார்.
இறுதிச் சுற்று ஆட்டம் சம
நிலையில் முடிய, பிரணவ் ஆனந்த் பட்டத்தை வென்றார்.
இந்தப் போட்டி 18 வயதுக்கு உட்பட்டோர், 16 வயதுக்கு உட்பட்டோர், 14 வயதுக்கு உட்பட்டோர் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது.
இப்போட்டி இம்மாதம் 5ஆம் தேதி தொடங்கியது. 2,494 தரப்புள்ளிகளுடன் முதலிடம் பெற்று பிரணவ் ஆனந்த் வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றினார்.
பிரணவ் ஆனந்த் பெங்களூருவைச் சேர்ந்தவர்.