இந்து இளங்கோவன்
தொடக்கப்பள்ளி பாடப் புத்தகங்களில் தொடங்கி பெருவிரைவு ரயில் நிலையங்களின் விளம்பரப் பலகைகள் வரை புவி வெப்ப
மயமாதல் உலகில் ஏற்படுத்தக்கூடிய பேரழிவைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பல ஆண்டுகளாகப் பொருள்களை மறுபயனீடு செய்யவும், தண்ணீரைச் சேமிக்கவும், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கவும் நமது அரசாங்கமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
நம்மில் பலர் வெப்பமயமாதலின் தாக்கங்களையும் அபாயங்களையும் அறிந்தும் சுற்றுசூழலைப் பாதுகாப்பிற்கேற்ப வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்வதில்லை.
இதற்கு என்ன காரணம்?
நாம் ஒவ்வொருவரும், நிறு வனங்களும் உலக வெப்பமயமா தல் தொடர்பில் எத்தகைய முக்கிய பங்குவகிக்கிறோம் என்பதைப் பற்றி உரையாட சுற்றுச் சூழல் ஆர்வலர் பொன்னி சிவகுமார் மற்றும் 'சஸ்டெய்னபல் லிவிங் லேப்' நிறுவனர் திரு வீரப்பன் ஆகியோர் 'முரசு பிஸ்ட்ரோ'வின் ஐந்தாவது பாகத்தில் தமிழ் முரசுடன் இணைந்தனர்.
மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பது, இலை, சணல், காகிதப் பை, கண்ணாடி புட்டிகள், துணிப்பை போன்றவைகளை பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்துவது, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது, பொருள்களை மறுபயனீடு செய்வது என அன்றாட வாழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நாம் செய்யக்கூடியவையும் பலவுண்டு.
வசதி, மலிவான விலை இது போன்ற காரணங்களால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உரிய அக்கறை செலுத்தத் தவறுகிறோம். இது சாதாரணமான விஷயமாக தோன்றினாலும், இத்தகைய சிறு மாற்றங்கள்கூட சிற்றுச்சூழலில் வியத்தகு விளைவுகளைத் தரும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
உரையாடலைக் காண இந்த 'கியூஆர்' குறியீட்டை வருடவும்: