ஒரேநேரத்தில் கல்வியை வழங்கிவிடுவதோடு ஊழியர்கள் தேவைப்
படும்போது அவ்வப்போது வந்து பயில்வதற்கு ஏற்ற வகையில் சிங்கப்பூரிலுள்ள கல்வி நிலையங்கள் இருக்க வேண்டும் என்றும் வேலையுடன் வாழ்க்கை என்பதற்கு உதவும் வகையில் அவ்வாறு இருப்பது சிறப்பு என்றும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வலியுறுத்தி உள்ளார்.
குறிப்பாக உயர் கல்வித் துறை புதிய மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் உருவெடுக்க வேண்டும். தொடர்கல்வி மற்றும் மின்னிலக்கம் என்று மாறிவரும் போக்கு
களுக்கு பல்கலைக்கழகங்கள் ஈடுகொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
“வாழ்நாள் கற்றலுக்கும் வேலையில் ஏற்படும் தடுமாற்றங்களைச் சமாளிக்க ஊழியர்களைத் தயார்ப் படுத்துவதற்கும் கைகொடுக்கக்கூடிய பெரிய மாற்றம் என்பது புதிது புதிதாக உருவாகும் தொழில்நுட்பங்களே,” என்று குறிப்பிட்ட திரு ஹெங், அதற்கு தானியக்கத்தை உதாரணமாகச் சுட்டினார்.
வருங்கால வேலைமுறையை வேகமாக மறுவடிவமைக்க தானியக்கத்தால் இயலும் என்றார் அவர்.
தென்கிழக்காசிய கல்விக் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று திரு ஹெங் உரை நிகழ்த்தினார். இதில் கிட்டத்தட்ட 300 பேராளர்கள் கலந்துகொண்டனர்.
டைம்ஸ் உயர்கல்வி நிலையம் ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) ஏற்று நடத்தியது.
“மாணவர்கள் படித்து முடித்து சான்றிதழைப் பெறுவதற்கு முன்பாகவே அவரது கற்றறிந்த அறிவாற்றலும் திறனும் படிப்படியாகக் குறையத் தொடங்கிவிடுகின்றன.
“இந்த நிலவரத்தைச் சமாளிக்க தனிப்பட்ட ஒவ்வொருவரின் திறனையும் வெவ்வேறு காலகட்டத்தில் தொடர்ந்து வளர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
“இங்குள்ள என்யுஎஸ் போன்ற முத்தரப்பு கல்வி நிலையங்கள் தற்போது பெரியோருக்காக நவீன உற்பத்திமுறை மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளுக்கான பாடத்திட்டங்களை தொகுத்து வழங்குகின்றன.
“இருப்பினும் வாழ்நாள் கற்றல் என்பது அவ்வளவு எளிதன்று. வெவ்வேறு முறைகளுடன் இடை விடாது பரிசோதிக்க வேண்டிய அவசியம் இதற்கு உள்ளது. கற்க வரும் பெரியோர்களின் வெவ்வேறு விருப்பங்களுக்கு ஏற்பத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. அதேநேரம் பரந்த கல்விநோக்கமும் தேவைப்
படுகிறது,” என்றார் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங்.
வாழ்நாள் கற்றல் போன்ற புதிதாக உருவெடுக்கும் தேவைகள், மாறிவரும் போக்குகள்