திருத்தணி அருகே தாயையும் மகனையும் கொன்று கொள்ளை யர்கள் நகை, பணத்தைக் கொள் ளையடித்துச் சென்றது அப்பகுதி வாழ் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெருமாள் தங்கல் புதூரைச் சேர்ந்த வனபெருமாள், 50, அருகே உள்ள டயர் தொழிற் சாலையில் காவலாளியாகப் பணி புரிந்து வருகிறார். அவருக்கு வீரலட்சுமி, 45, என்ற மனைவியும் பவித்ரா, 25, போத்திராஜ், 10, என இரு பிள்ளைகளும் இருக் கின்றனர்.
வழக்கம்போல் கடந்த ஞாயிறு இரவு வேலைக்குச் சென்ற திரு பெருமாள், மறுநாள் காலையில் வீடு திரும்பினார். கதவைப் பல முறை தட்டியும் திறக்காததால் சன்னல் வழியாக எட்டிப் பார்த்த அவர் தம்முடைய மனைவியும் மகனும் இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
திருமதி வீரலெட்சுமியின் கழுத்தில் இருந்த எட்டு சவரன் நகையைக் காணவில்லை. அத் துடன், படுக்கையறை பீரோவில் இருந்த 21 சவரன் நகைகளும் 20 ஆயிரம் ரூபாயும் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.
சுவரெல்லாம் ரத்தம் தெறித்து இருந்ததைக் கண்டபோது கொள் ளையர்களை எதிர்த்து திருமதி வீரலட்சுமி போராடி இருக்கலாம் எனத் தெரிகிறது. மாற்றுத் திற னாளியான அவரது கழுத்தில் வெட்டுக்காயம் இருந்தது.
கொள்ளையர்கள் சிறுவன் போத்திராஜை கழுத்தை நெரித் துக் கொன்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
கொலை, கொள்ளையில் ஈடு பட்ட மர்ம கும்பலை போலிசார் தனிப்படை அமைத்து தேடி வரு கின்றனர்.
தாய், மகனைக் கொன்று நகையும் பணமும் கொள்ளை
10 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Apr 2019 09:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!