தாய், மகனைக் கொன்று நகையும் பணமும் கொள்ளை

திருத்தணி அருகே தாயையும் மகனையும் கொன்று கொள்ளை யர்கள் நகை, பணத்தைக் கொள் ளையடித்துச் சென்றது அப்பகுதி வாழ் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெருமாள் தங்கல் புதூரைச் சேர்ந்த வனபெருமாள், 50, அருகே உள்ள டயர் தொழிற் சாலையில் காவலாளியாகப் பணி புரிந்து வருகிறார். அவருக்கு வீரலட்சுமி, 45, என்ற மனைவியும் பவித்ரா, 25, போத்திராஜ், 10, என இரு பிள்ளைகளும் இருக் கின்றனர்.
வழக்கம்போல் கடந்த ஞாயிறு இரவு வேலைக்குச் சென்ற திரு பெருமாள், மறுநாள் காலையில் வீடு திரும்பினார். கதவைப் பல முறை தட்டியும் திறக்காததால் சன்னல் வழியாக எட்டிப் பார்த்த அவர் தம்முடைய மனைவியும் மகனும் இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
திருமதி வீரலெட்சுமியின் கழுத்தில் இருந்த எட்டு சவரன் நகையைக் காணவில்லை. அத் துடன், படுக்கையறை பீரோவில் இருந்த 21 சவரன் நகைகளும் 20 ஆயிரம் ரூபாயும் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.
சுவரெல்லாம் ரத்தம் தெறித்து இருந்ததைக் கண்டபோது கொள் ளையர்களை எதிர்த்து திருமதி வீரலட்சுமி போராடி இருக்கலாம் எனத் தெரிகிறது. மாற்றுத் திற னாளியான அவரது கழுத்தில் வெட்டுக்காயம் இருந்தது.
கொள்ளையர்கள் சிறுவன் போத்திராஜை கழுத்தை நெரித் துக் கொன்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
கொலை, கொள்ளையில் ஈடு பட்ட மர்ம கும்பலை போலிசார் தனிப்படை அமைத்து தேடி வரு கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!