கட்சி தொடங்கிய நடிகர்கள் காணாமல் போய்விட்டனர்: ரஜினி குறித்து அதிமுக

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் அதிமுக-திமுக இடையேதான் போட்டி இருக்கும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், ‘ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகர், நல்ல மனிதர். அவர் அரசியலுக்கு வரட்டும். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.

“அவர் அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்து, மக்களையும் தேர்தலையும் சந்தித்த பின்னரே அவருக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு பற்றி தெரிய வரும். இப்போது எதுவும் சொல்ல முடியாது. இதற்கு முன்னாள் பல நடிகர்கள் அரசியலுக்கு மிக வேகமாக வந்து, வந்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டனர். அவர்கள் பெயரைக்கூட நான் சொல்ல விரும்பவில்லை,” என்றார் வளர்மதி.

மேலும் அவர், “எங்களைப் பொறுத்தவரை அதிமுகவுக்கு எதிரிக்கட்சி திமுக மட்டுமே. தேர்தல் களத்தில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி நடக்கும்,” என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!