சென்னை: கர்நாடக அரசுபோல் ஆவின் நிறுவனத்தின் மூலம் ஏழை, எளியோருக்கு இலவசமாக பால் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா கிருமிப் பாதிப்பு பொதுமக்களிடையே பரவாமல் தடுக்க சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் வகையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் சூழலில் 100% தேநீர் கடைகளும் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மளிகைக்கடைகளும் தமிழகம் முழுவதும் மூடப்பட்டுவிட்டதால் தற்போது தமிழகத்தில் பால் விற்பனை என்பது வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அண்டை மாநில அரசுகள் செய்கின்ற நல்ல விஷயங்களை அதனை தமிழக அரசு பின்பற்றுவதன் மூலம் பொதுமக்கள் பலனடைவதோடு பால் உற்பத்தியாளர்களும் பயன்பெறுவார்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.