சென்னை: எவ்வளவு சொன்னாலும், சிலர் கேட்பதில்லை. இனிமேல் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று பொதுமக்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
“கொரோனா கிருமி தீவிரத்தை உணராமல் சிலர் விளையாட்டுத் தனமாக வாகனங்களில் சுற்றி வரு கின்றனர். நோயின் தாக்கத்தை உணர வேண்டும்.
“நோயை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
“மக்களை துன்புறுத்த 144 தடை உத்தரவு போடப்படவில்லை; அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்காக போடப்பட்டுள்ளது.
“அதை மனதில் வைத்து மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்களை வாங்க தினசரி செல்லக் கூடாது. ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதை கடைப்பிடிப்பது மக்களின் கடமை. ஆனால் எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பதில்லை. இனிமேல் சட்டம் தன் கடமையை செய்யும். பொதுமக்களுக்கு அரசு ஒத்துழைப்பு தருகிறது. இதை சரியாக பயன்படுத்த வேண்டும். தடை உத்தரவை கடுமையாக்குவதை தவிர வேறு வழியில்லை. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்,” என எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.
வெள்ளிக்கிழமை சென்னை ஆர்ஏ.புரம், சூளை, கண்ணப்பர் திடல், வேளச்சேரி, குருநானக் கல்லுாரி ஆகிய இடங்களில், தங்க வைக்கப்பட்டுள்ள வெளி மாநில தொழிலாளர்களை முதல்வர் பழனிசாமி சந்தித்து அவர்களுக்கு அரசு சார்பில் உதவிகளை வழங் கினார்.
“அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வரும் வாகனங்கள் அதி கம் இயக்கப்படாததால் முக்கிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது.
“‘எந்த மாநிலமும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கக் கூடாது’ என பிரதமர் கூறியுள்ளார். அதற்குள் நிலைமை சரியாகி விடும். மளிகை பொருட் களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.
“அரசுக்கு வரும், ஜி.எஸ்.டி., வரி வருவாய் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் அரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படாது. வெளி மாநிலத்தில் இருந்து வந்து பணிபுரிகிற, 1.34 லட்சம் பேருக்குத் தேவையான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது,” என தமிழக முதல்வர் தெரிவித்தார்.