சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நேற்று காலை வரை மேலும் 4,150 பேருக்கு புதி தாக கொரோனா கிருமித் தொற்று பரவியது உறுதியானதை அடுத்து இத்தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60,592ல் இருந்து 62,778 ஆக உயர்வடைந்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை யில், “தமிழகத்தில் இன்று புதி தாக 4,150 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. அதில் 4,077 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் 73 பேர் வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
“இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர் களின் எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது.
“தமிழகத்தில் புதிதாக பாதிக்கப்பட்ட 4,150 பேரில் சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
“தமிழகத்தில் 95 ஆய்வகங்கள் உள்ளன. இந்த ஆய்வகங்களில் இதுவரை 13,41,715 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
“கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 68,085 ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 43,044 ஆகவும் மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் 2,186 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இவர்களை யும் சேர்த்து 62,778 வீடு திரும்பி உள்ளனர்,” எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.