சென்னை மாநகரையும் அதைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு மாவட்டங்
களையும் பாடாய்படுத்தி வரும் கொரோனா கிருமித்தொற்று தற்போது தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஊடகங்களில் எச்சரிக்கைச் செய்திகள் இடம்பெற்று வருகின்றன.
அவ்வாறு பரவினால் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பத்து மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் ஜூன் மாதம் 20ஆம் தேதிக்கு முன்னர் வரை கிருமித்தொற்று சம்பவங்கள் பெரிய அளவில் பதிவாகவில்லை.
நாள் ஒன்றுக்கு 10, 20 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென அந்த எண்ணிக்கை 200, 300 என உயர்ந்தது. அதனால், மதுரை மாவட்ட மக்கள் பரிதவிக்கும் நிலை உருவானது. தற்போது வரை அந்நிலையே அங்கு தொடருகிறது.
கிருமி பாதிப்பு காரணமாக உயிரிழக்கும் விகிதமும் சென்னையை மிஞ்சும் அளவுக்கு வேகமெடுத்து வருகிறது. மாண்டோரை தகனம் செய்யும் மின் மயானங்கள் இடைவிடாது இயங்கத் தொடங்கி உள்ளன. இப்படியே போனால் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரிக்கும் நிலை உருவாகக்கூடும்.
மதுரையைப் போலவே திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் அண்மைய நாட்களாக கிருமிப் பரவல் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் இம்மாவட்டங்களில் பதிவானதைக் காட்டிலும் பத்து மடங்கிற்கு மேல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
தமிழகத்தில் சென்னைதான் ஆக அதிக பாதிப்புக்கு ஆளாகி வந்த நிலையில் தற்போது மதுரை சென்னைபோல் ஆகிவிட்டது. பிற தென்மாவட்டங்கள் மதுரையைப் போல் கிருமியின் கொடுங்கரங்களுக்குள் சிக்கிவிடாமல் பாதுகாப்பது அவசியம் என கருதிய அதிகாரிகள் தீவிர நடவடிக் கைகளைத் தொடங்கி உள்ளனர்.
கிருமித்தொற்று நிலவரம் உச்சக்கட்டத்தைத் தொட்ட சென்னை மாநகரில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஏராளமானோர் கடந்த சில வாரங் களாக வெளியேறி வேறு இடங்களுக்குச் சென்றனர்.
அவர்களில் முக்கால்வாசிப் பேர் தென் மாவட்டங்களுக்கே சென்றனர். மற்ற மாவட்டங்களுக்குள் அவ்வாறு நுழைந்தவர்களை முறையாக பரிசோதிக்காமல் விட்ட தால்தான் அந்த இடங்களில் கிருமித்தொற்று சம்பவங்கள் பெருகிவிட்டதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும், தற்போதைய பரிசோதிக்கும் முறை போதுமானதாக இல்லை. மதுரையில் தினமும் 3,000 பேருக்கு கிருமித்தொற்று பரிசோதனை நடைபெறும் நிலையில் மற்ற தென்மாவட்டங்களில் அந்த எண்ணிக்கை நூறு, இருநூறு என்ற அளவிலேயே உள்ளது. இவற்றை அதிகரிப்பதற் கான வேலைகள் விரைவில் தொடங்க உள்ளதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது.