தஞ்சாவூர்: கொவிட்-19 கிருமிப் பரவலால் தங்களது 100% வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் தஞ்சாவூர் திரையரங்க ஊழியர்கள், இப்போது தங்களது வாழ்க்கைப் பாதையை மீன் வியாபாரம் பக்கம் மாற்றிக்கொண்டுள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் 100 நாட்களுக்கும் மேலாக திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளன.
திரைப்படங்கள் ஓடாததால் கல்லா கட்டமுடியாத திரையரங்கு உரிமையாளர்கள், தங்களது ஊழி யர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறினர்.
இதனால் தவித்த ஊழியர்கள் பலரும் ஆங்காங்கே தங்கள் குடும்பத்ைதக் காப்பாற்றுவதற்காக மாற்று வேலைகளில் இறங்கி உள்ளனர்.
தஞ்சாவூரில் திரையரங்கில் வேலை பார்த்த மாரிமுத்து, சைமன், கணேசன், ராஜா ஆகிய நான்கு ஊழியர்களும் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.
அவர்கள் கூறுகையில், “படம் நன்றாக ஓடினால் சம்பளத்துடன் கூடுதலாக பணம் தருவார்கள்.
“திரையரங்க தொழிலைத் தவிர வேறு எந்த ஒரு வேலையும் எங்களுக்குத் தெரியாது.
“தற்போது திரை அரங்குகள் மூடப்பட்டதால் மொத்த விலைக்கு மீன்களை வாங்கி, சாலையோரத்தில் கடை போட்டு கூவிக் கூவி விற்பனை செய்கிறோம். கூட்டாக செய்வதால் பிரச்சினைகள் தெரிய வில்லை. இதில் வரும் வருமானம் குடும்பம் நடத்த ஓரளவு போது மானதாக உள்ளது,” என்றனர்.